FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, October 30, 2014

தனியார் பஸ்களில் கட்டண சலுகை மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை


28.10.2014 கடலூர்:
தனியார் பஸ்களிலும் 50 சதவீதம் கட்டண சலுகை அளித்திட வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கடலூர் மாவட்ட குழுக் கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஆளவந்தார், மாவட்ட நிர்வாகிகள் ராஜ்குமார், வசந்தி, முத்தையன் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கேரளாவில் உள்ளது போல் தனியார் பஸ்களிலும் 50 சதவீதம் கட்டண சலுகை அளித்திட வேண்டும். திருமணம் மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவிகளுக்காக பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment