FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, October 19, 2014

ஐ.ஏ.எஸ் ஆவதே லட்சியம்: மாற்றுத் திறனாளி மாணவர்

16 October 2014,
ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் அதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே காரணம் என்று கூறுகிறார் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கைகள் இல்லாத எம்.சையத் காதர் (21).

இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வருகிறார்.

இது குறித்து அவரிடம் பேசுகையில் அப்பா முகமது யூசுப் சர்க்கஸ் குழுவில் பணிபுரிகிறார் நிரந்தர வருவாய் இல்லை. குடும்ப வறுமையின் காரணமாக தனது தாய் ஆசியா பேகம் சிரமப்பட்ட போது சென்னை அண்ணாநகரில் உள்ள கில்ட் ஆஃப் சர்வீஸ் இல்லம் பற்றி அறிந்து என்னை அங்கே சேர்த்தார்கள்.

அங்கே தன்னுடன் சேர்த்து பிறவிக் குறைபாடுகள் உடைய 60 பேருடன் தங்க நேர்ந்தது. அவர்களை விட எனக்கு இது பெரிய ஊனமாக தெரியவில்லை. கல்வி மட்டுமே வாழ்வில் ஒளி தரும் என்பதை உணர்ந்து படிக்கத் தொடங்கினேன். முன்னாள் குடியரசுத்தலைவரின் அக்னி சிறகுகள் நூலை படித்தபோது தன்னம்பிக்கை வளர்ந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறவேண்டும் என்ற கனவும் அதற்கான முனைப்பிலும் ஈடுபட்டேன்.

தினசரி செய்தித்தாள்களில் அரசியல், சமூகம் உள்ளிட்டவைகளை ஆழ்ந்து படிக்கத்தொடங்கினேன். 9-ஆம் வகுப்பு வரை காலால் தான் தேர்வு எழுதினேன். ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்குவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியர் ஒருவர் துணைக்கு அமர்த்தப்பட்டார் அதில் 366 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே 2 - ஆவது இடத்தை பெற்றேன். அரசின் இலவச பஸ் பாஸ் தனக்கு பேருதவியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment