FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, October 19, 2014

மாற்றுத்திறனாளிகளுக்குதையல் இயந்திரம் வழங்க நேர்காணல்

17.10.2014, சேலம் :
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 54 பேருக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவி, ஊனத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று சக்கர சைக்கிள், டூ வீலர், செயற்கை கால், காதொலி கருவி, இரும்பு ஸ்டிக், தையல் இயந்திரம், உதவித்தொகை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், 2014ம் ஆண்டுக்கு, 80 தையல் இயந்திரங்கள் வந்தன. அவற்றில், முதல் கட்டமாக கொடுத்ததுபோக, 54 இயந்திரம் இருந்தது.அதையடுத்து, 120 பேருக்கு நேர்காணலுக்கான கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று, மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், தையல் பயிற்சி முடித்தவர்கள், தங்களுடைய சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையுடன் வந்து கலந்து கொண்டனர். தையல் இயந்திரத்தை சரியான முறையில் இயக்குகிறார்களா என்பது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தங்கமணி, அதிகாரிகள், சேகர், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின், அவர்கள் தைத்த துணிகள் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓரிரு வாரத்தில், தகுதியானோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment