FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, October 19, 2014

மாற்றுத்திறனாளிகளுக்குதையல் இயந்திரம் வழங்க நேர்காணல்

17.10.2014, சேலம் :
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 54 பேருக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவி, ஊனத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று சக்கர சைக்கிள், டூ வீலர், செயற்கை கால், காதொலி கருவி, இரும்பு ஸ்டிக், தையல் இயந்திரம், உதவித்தொகை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், 2014ம் ஆண்டுக்கு, 80 தையல் இயந்திரங்கள் வந்தன. அவற்றில், முதல் கட்டமாக கொடுத்ததுபோக, 54 இயந்திரம் இருந்தது.அதையடுத்து, 120 பேருக்கு நேர்காணலுக்கான கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று, மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், தையல் பயிற்சி முடித்தவர்கள், தங்களுடைய சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையுடன் வந்து கலந்து கொண்டனர். தையல் இயந்திரத்தை சரியான முறையில் இயக்குகிறார்களா என்பது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தங்கமணி, அதிகாரிகள், சேகர், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின், அவர்கள் தைத்த துணிகள் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓரிரு வாரத்தில், தகுதியானோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment