FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, October 19, 2014

மாற்றுத்திறனாளிகளுக்குதையல் இயந்திரம் வழங்க நேர்காணல்

17.10.2014, சேலம் :
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 54 பேருக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவி, ஊனத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று சக்கர சைக்கிள், டூ வீலர், செயற்கை கால், காதொலி கருவி, இரும்பு ஸ்டிக், தையல் இயந்திரம், உதவித்தொகை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், 2014ம் ஆண்டுக்கு, 80 தையல் இயந்திரங்கள் வந்தன. அவற்றில், முதல் கட்டமாக கொடுத்ததுபோக, 54 இயந்திரம் இருந்தது.அதையடுத்து, 120 பேருக்கு நேர்காணலுக்கான கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று, மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், தையல் பயிற்சி முடித்தவர்கள், தங்களுடைய சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையுடன் வந்து கலந்து கொண்டனர். தையல் இயந்திரத்தை சரியான முறையில் இயக்குகிறார்களா என்பது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தங்கமணி, அதிகாரிகள், சேகர், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின், அவர்கள் தைத்த துணிகள் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓரிரு வாரத்தில், தகுதியானோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment