FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, October 23, 2014

காதலி கொலை: பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டு சிறை

தோழியைக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க நட்சத்திர பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு செவ்வாய்க்கிழமை சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸ் அதிகாரி.
 21 October 2014
காதலியைக் கொன்ற வழக்கில், தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர பாராலிம்பிக் ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நிதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

தென் ஆப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனின் பிரிடோரியா பகுதியிலுள்ள பிஸ்டோரியஸின் (27) இல்லத்தில், தோழி ரீவா ஸ்டீகெம்பை (30) சுட்டுக் கொன்றதாக கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குளியலறைக்குள் ரீவா இருந்தபோது, அவரை அத்துமீறி உள்ளே நுழைந்த
அன்னியர் என்று தவறாக நினைத்து சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பிஸ்டோரியஸ் பலமுறை கண்ணீர் விட்டு அழுததுடன், அடிக்கடி வாந்தியும் எடுத்தார்.

இது உலகம் முழுவதும் பெரும் அனுதாப அலையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்து நீதிபதி தோகோஸிலே மஸிபா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிஸ்டோரியஸ் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்துக்காக மூன்று ஆண்டுகள் "இடைநிறுத்த' சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது (நன்னடைத்தை அடிப்படையில் இந்தத் தண்டனை பிற்காலத்தில் நீக்கப்படலாம்).

இந்த வழக்கில் குற்றத்துக்கு சரியானத் தண்டனை வழங்குவது, குற்றம் மேலும் நடைபெறாமல் தடுப்பது, குற்றவாளியை சீர்திருத்துவது ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில், ஏழைகளுக்கு ஒரு சட்டமும், செல்வமும், புகழும் நிறைந்தவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க வேண்டும் என சிலர் எதிர்பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

பிஸ்டோரியஸ் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், சிறையில் அவருக்கு ஆபத்து நேரிடும்; எனவே அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல.

மாற்றுத் திறனாளி என்றாலும், சூழல்களை சமாளிக்கும் திறன் பிஸ்டோரியஸýக்கு உள்ளது.

குற்றம்: மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான ஆயுதத்தைக் (துப்பாக்கி) கொண்டு, ரீவா இருந்த குளியலறைக் கதவில் பிஸ்டோரியஸ் ஒரு முறை அல்ல, நான்கு முறை சுட்டுள்ளார்.

அந்த மிகச் சிறிய குளியலறைக்குள் இருப்பவர், அங்கிருந்து தப்பியோட சிறிதும் வழியில்லாத நிலையில் அவர் இத்தனை முறை சுட்டுள்ளார் (எனவே இது கொலையே ஆகும்) என்று நீதிபதி மஸிபா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று நடைபெற்ற இந்தக் கொலையில், பிஸ்டோரியஸ் மீதான மற்ற தீவிர குற்றச் சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment