FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, October 23, 2014

காதலி கொலை: பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டு சிறை

தோழியைக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க நட்சத்திர பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு செவ்வாய்க்கிழமை சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸ் அதிகாரி.
 21 October 2014
காதலியைக் கொன்ற வழக்கில், தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர பாராலிம்பிக் ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நிதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

தென் ஆப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனின் பிரிடோரியா பகுதியிலுள்ள பிஸ்டோரியஸின் (27) இல்லத்தில், தோழி ரீவா ஸ்டீகெம்பை (30) சுட்டுக் கொன்றதாக கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குளியலறைக்குள் ரீவா இருந்தபோது, அவரை அத்துமீறி உள்ளே நுழைந்த
அன்னியர் என்று தவறாக நினைத்து சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பிஸ்டோரியஸ் பலமுறை கண்ணீர் விட்டு அழுததுடன், அடிக்கடி வாந்தியும் எடுத்தார்.

இது உலகம் முழுவதும் பெரும் அனுதாப அலையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்து நீதிபதி தோகோஸிலே மஸிபா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிஸ்டோரியஸ் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்துக்காக மூன்று ஆண்டுகள் "இடைநிறுத்த' சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது (நன்னடைத்தை அடிப்படையில் இந்தத் தண்டனை பிற்காலத்தில் நீக்கப்படலாம்).

இந்த வழக்கில் குற்றத்துக்கு சரியானத் தண்டனை வழங்குவது, குற்றம் மேலும் நடைபெறாமல் தடுப்பது, குற்றவாளியை சீர்திருத்துவது ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில், ஏழைகளுக்கு ஒரு சட்டமும், செல்வமும், புகழும் நிறைந்தவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க வேண்டும் என சிலர் எதிர்பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

பிஸ்டோரியஸ் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், சிறையில் அவருக்கு ஆபத்து நேரிடும்; எனவே அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல.

மாற்றுத் திறனாளி என்றாலும், சூழல்களை சமாளிக்கும் திறன் பிஸ்டோரியஸýக்கு உள்ளது.

குற்றம்: மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான ஆயுதத்தைக் (துப்பாக்கி) கொண்டு, ரீவா இருந்த குளியலறைக் கதவில் பிஸ்டோரியஸ் ஒரு முறை அல்ல, நான்கு முறை சுட்டுள்ளார்.

அந்த மிகச் சிறிய குளியலறைக்குள் இருப்பவர், அங்கிருந்து தப்பியோட சிறிதும் வழியில்லாத நிலையில் அவர் இத்தனை முறை சுட்டுள்ளார் (எனவே இது கொலையே ஆகும்) என்று நீதிபதி மஸிபா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று நடைபெற்ற இந்தக் கொலையில், பிஸ்டோரியஸ் மீதான மற்ற தீவிர குற்றச் சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment