FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, October 23, 2014

காதலி கொலை: பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டு சிறை

தோழியைக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க நட்சத்திர பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு செவ்வாய்க்கிழமை சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸ் அதிகாரி.
 21 October 2014
காதலியைக் கொன்ற வழக்கில், தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர பாராலிம்பிக் ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நிதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

தென் ஆப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனின் பிரிடோரியா பகுதியிலுள்ள பிஸ்டோரியஸின் (27) இல்லத்தில், தோழி ரீவா ஸ்டீகெம்பை (30) சுட்டுக் கொன்றதாக கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குளியலறைக்குள் ரீவா இருந்தபோது, அவரை அத்துமீறி உள்ளே நுழைந்த
அன்னியர் என்று தவறாக நினைத்து சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பிஸ்டோரியஸ் பலமுறை கண்ணீர் விட்டு அழுததுடன், அடிக்கடி வாந்தியும் எடுத்தார்.

இது உலகம் முழுவதும் பெரும் அனுதாப அலையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்து நீதிபதி தோகோஸிலே மஸிபா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிஸ்டோரியஸ் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்துக்காக மூன்று ஆண்டுகள் "இடைநிறுத்த' சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது (நன்னடைத்தை அடிப்படையில் இந்தத் தண்டனை பிற்காலத்தில் நீக்கப்படலாம்).

இந்த வழக்கில் குற்றத்துக்கு சரியானத் தண்டனை வழங்குவது, குற்றம் மேலும் நடைபெறாமல் தடுப்பது, குற்றவாளியை சீர்திருத்துவது ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில், ஏழைகளுக்கு ஒரு சட்டமும், செல்வமும், புகழும் நிறைந்தவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க வேண்டும் என சிலர் எதிர்பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

பிஸ்டோரியஸ் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், சிறையில் அவருக்கு ஆபத்து நேரிடும்; எனவே அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல.

மாற்றுத் திறனாளி என்றாலும், சூழல்களை சமாளிக்கும் திறன் பிஸ்டோரியஸýக்கு உள்ளது.

குற்றம்: மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான ஆயுதத்தைக் (துப்பாக்கி) கொண்டு, ரீவா இருந்த குளியலறைக் கதவில் பிஸ்டோரியஸ் ஒரு முறை அல்ல, நான்கு முறை சுட்டுள்ளார்.

அந்த மிகச் சிறிய குளியலறைக்குள் இருப்பவர், அங்கிருந்து தப்பியோட சிறிதும் வழியில்லாத நிலையில் அவர் இத்தனை முறை சுட்டுள்ளார் (எனவே இது கொலையே ஆகும்) என்று நீதிபதி மஸிபா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று நடைபெற்ற இந்தக் கொலையில், பிஸ்டோரியஸ் மீதான மற்ற தீவிர குற்றச் சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment