FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, October 23, 2014

காதலி கொலை: பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டு சிறை

தோழியைக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க நட்சத்திர பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு செவ்வாய்க்கிழமை சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸ் அதிகாரி.
 21 October 2014
காதலியைக் கொன்ற வழக்கில், தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர பாராலிம்பிக் ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நிதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

தென் ஆப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனின் பிரிடோரியா பகுதியிலுள்ள பிஸ்டோரியஸின் (27) இல்லத்தில், தோழி ரீவா ஸ்டீகெம்பை (30) சுட்டுக் கொன்றதாக கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குளியலறைக்குள் ரீவா இருந்தபோது, அவரை அத்துமீறி உள்ளே நுழைந்த
அன்னியர் என்று தவறாக நினைத்து சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பிஸ்டோரியஸ் பலமுறை கண்ணீர் விட்டு அழுததுடன், அடிக்கடி வாந்தியும் எடுத்தார்.

இது உலகம் முழுவதும் பெரும் அனுதாப அலையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்து நீதிபதி தோகோஸிலே மஸிபா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிஸ்டோரியஸ் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்துக்காக மூன்று ஆண்டுகள் "இடைநிறுத்த' சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது (நன்னடைத்தை அடிப்படையில் இந்தத் தண்டனை பிற்காலத்தில் நீக்கப்படலாம்).

இந்த வழக்கில் குற்றத்துக்கு சரியானத் தண்டனை வழங்குவது, குற்றம் மேலும் நடைபெறாமல் தடுப்பது, குற்றவாளியை சீர்திருத்துவது ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில், ஏழைகளுக்கு ஒரு சட்டமும், செல்வமும், புகழும் நிறைந்தவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க வேண்டும் என சிலர் எதிர்பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

பிஸ்டோரியஸ் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், சிறையில் அவருக்கு ஆபத்து நேரிடும்; எனவே அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல.

மாற்றுத் திறனாளி என்றாலும், சூழல்களை சமாளிக்கும் திறன் பிஸ்டோரியஸýக்கு உள்ளது.

குற்றம்: மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான ஆயுதத்தைக் (துப்பாக்கி) கொண்டு, ரீவா இருந்த குளியலறைக் கதவில் பிஸ்டோரியஸ் ஒரு முறை அல்ல, நான்கு முறை சுட்டுள்ளார்.

அந்த மிகச் சிறிய குளியலறைக்குள் இருப்பவர், அங்கிருந்து தப்பியோட சிறிதும் வழியில்லாத நிலையில் அவர் இத்தனை முறை சுட்டுள்ளார் (எனவே இது கொலையே ஆகும்) என்று நீதிபதி மஸிபா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று நடைபெற்ற இந்தக் கொலையில், பிஸ்டோரியஸ் மீதான மற்ற தீவிர குற்றச் சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment