FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, October 27, 2014

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவசக் கல்வி: நேத்ரோதயா நிறுவனர் கோரிக்கை

சென்னை,27 October 2014
ஆதிதிராவிடர், பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் இலவசக் கல்வி அளிக்க பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று நேத்ரோதயா நிறுவனர் சி.கோவிந்தகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

"நேத்ரோதயா' பார்வையற்றோர் சிறப்புப் பள்ளியின் 12-ஆம் ஆண்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சி.கோவிந்தகிருஷ்ணன் பேசியது:

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும்,
கல்வி பயிலும்போது அவர்களுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் "நேத்ரோதயா' பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பி.எட்., படிப்பு பயில்வோர், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பயில்வோருக்கு பாடத்திட்டங்கள் அடங்கிய குறுந்தகடுகள் வழங்கப்படுகின்றன.

முன்பு பிரெய்லி முறையில் புத்தகங்களை வாசித்தல், பிறர் வாசிக்கும்போது கேட்டல் ஆகியவற்றின் மூலம் கல்வி பயில்வதில் பல்வேறு இடர்பாடுகள் இருந்தன. இதனைப் போக்கும் வகையில், தற்போது பாடத்திட்டங்கள் அடங்கிய குறுந்தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதில் கல்வி கற்க முடியும்.

பார்வையிழப்புக்கான காரணம் குறித்து ஆரம்ப நிலையிலே கண்டறிந்து நிரந்தர பார்வையிழப்பு உறுதி செய்யப்பட்டால் காலத்தை விரையம் செய்யாமல் மறுவாழ்வுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கண்ணை, அப்படியே இன்னொருவருக்குப் பொருத்த முடியாது. கார்னியா எனும், கண்ணின் கருவிழியை மட்டுமே பொருத்த முடியும். எனவே, ஆண்டுதோறும் நடைபெறும் கண் தான விழிப்புணர்வுப் பிரசாரத்தை இனி வரும்

ஆண்டுகளில், கருவிழி தான விழிப்புணர்வு என பிரசாரம் செய்ய உள்ளோம்.

ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் இலவசமாக கல்வி பயில அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், ரயில் பயண முன்பதிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு என இணையதள முன்பதிவு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவார்கள் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 மதிப்பிலான விற்பனைப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

பார்வைத்திறன் குறைந்த மாணவர்களுக்கு இலவசக் கல்வி

பார்வைத்திறன் குறைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு "நேத்ரோதயா'வில் இலவசக் கல்வி, தங்குமிடம், உணவு ஆகியவை அளிக்கப்படுகின்றன. இதை கிராமப்புற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்த விவரங்களை அறியவும், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பி.எட்., படிப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்கள் அடங்கிய குறுந்தகடுகளைப் பெறவும் 044-26533680, 26530712 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு இலவசமாகப் பெறலாம் என சி.கோவிந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment