FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, October 30, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு விருது

 30.10.2014, சென்னை :
தமிழக அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகள் தினமான, டிச., 3ம் தேதி, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக பணிபுரிந்தோர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. சிறந்த பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர், ஐந்து பேர், சிறந்த ஆசிரியர் மூன்று பேர், சிறந்த சமூகப் பணியாளர் ஒருவருக்கு, விருது வழங்கப்படும்.

மேலும், ஒரு தொண்டு நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும், சிறந்த ஆசிரியர்கள் இருவர், மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பாக பணியாற்றிய டிரைவர் மற்றும் கண்டக்டர் என, மொத்தம், 14 விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறுவோருக்கு, 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விருது பெற தகுதியானவர்கள், சென்னை, கே.கே.நகர், நேரு உள்வட்ட சாலையில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாநில ஆணையருக்கு, அடுத்த மாதம், 12ம் தேதிக்குள், அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment