FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, October 30, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு விருது

 30.10.2014, சென்னை :
தமிழக அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகள் தினமான, டிச., 3ம் தேதி, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக பணிபுரிந்தோர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. சிறந்த பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர், ஐந்து பேர், சிறந்த ஆசிரியர் மூன்று பேர், சிறந்த சமூகப் பணியாளர் ஒருவருக்கு, விருது வழங்கப்படும்.

மேலும், ஒரு தொண்டு நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும், சிறந்த ஆசிரியர்கள் இருவர், மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பாக பணியாற்றிய டிரைவர் மற்றும் கண்டக்டர் என, மொத்தம், 14 விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறுவோருக்கு, 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விருது பெற தகுதியானவர்கள், சென்னை, கே.கே.நகர், நேரு உள்வட்ட சாலையில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாநில ஆணையருக்கு, அடுத்த மாதம், 12ம் தேதிக்குள், அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment