FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, October 24, 2014

போலியோவை ஒழிக்க போராடி வரும்ஆஸ்திரேலிய மாற்றுத்திறனாளி பெண்

24.10.2014, ஆத்தூர் :
போலியோவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண், போலியோவை ஒழிக்க, உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, கெயின்ஸ் சன்ரைஸ் பகுதியை சேர்ந்தவர் சுஷேன்னேரியா, 71. அவர், போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், போலியோ நோயை கட்டுப்படுத்த, தனது சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சென்று, ரோட்டரி சங்க விழாவில் பங்கேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நன்கொடை வழங்கி வருகிறார்.ரோட்டரி சங்க விருந்தில் பங்கேற்று, அவருடன் விருந்து சாப்பிடுவோரிடம், 200 ரூபாய் வசூல் செய்து, உணவுக்கு, 50 ரூபாய் போக, மீதம், 150 ரூபாயை வாங்கிக் கொண்டு, அத்தொகையை, போலியோ ஒழிப்புக்கு உதவித் தொகையாக வழங்கி வருகிறார்.நேற்று, ஆத்தூர், சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில், "போலியோவை ஒழிக்க எங்களுடன் சாப்பிட வாருங்கள்' என்ற விழிப்புணர்வு விழா நடந்தது.விழாவில் கலந்து கொண்டு சுஷேன்னேரியா பேசியதாவது:சிறு வயதில், போலியோ நோய் ஏற்பட்டால், மாற்றுத் திறனாளியாகவும், உடல் பலவீனமான நிலை ஏற்படுகிறது. போலியோ நோயால், நானும் சிறு வயதில் பாதிக்கப்பட்டேன். என்னை போல், மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, நன்கொடை வழங்கி வருகிறேன்.போலியோ நோய், உலகளவில் கட்டுப்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் இல்லாதவகையில், எதிர் கால சந்ததியினர் உருவாக்குவதே என் வாழ்நாள் லட்சியம்.இவ்வாறு பேசினார்.விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் பாலசுப்ரமணியம், மாவட்ட தலைவர் நிர்மல்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment