FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, October 24, 2014

போலியோவை ஒழிக்க போராடி வரும்ஆஸ்திரேலிய மாற்றுத்திறனாளி பெண்

24.10.2014, ஆத்தூர் :
போலியோவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண், போலியோவை ஒழிக்க, உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, கெயின்ஸ் சன்ரைஸ் பகுதியை சேர்ந்தவர் சுஷேன்னேரியா, 71. அவர், போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், போலியோ நோயை கட்டுப்படுத்த, தனது சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சென்று, ரோட்டரி சங்க விழாவில் பங்கேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நன்கொடை வழங்கி வருகிறார்.ரோட்டரி சங்க விருந்தில் பங்கேற்று, அவருடன் விருந்து சாப்பிடுவோரிடம், 200 ரூபாய் வசூல் செய்து, உணவுக்கு, 50 ரூபாய் போக, மீதம், 150 ரூபாயை வாங்கிக் கொண்டு, அத்தொகையை, போலியோ ஒழிப்புக்கு உதவித் தொகையாக வழங்கி வருகிறார்.நேற்று, ஆத்தூர், சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில், "போலியோவை ஒழிக்க எங்களுடன் சாப்பிட வாருங்கள்' என்ற விழிப்புணர்வு விழா நடந்தது.விழாவில் கலந்து கொண்டு சுஷேன்னேரியா பேசியதாவது:சிறு வயதில், போலியோ நோய் ஏற்பட்டால், மாற்றுத் திறனாளியாகவும், உடல் பலவீனமான நிலை ஏற்படுகிறது. போலியோ நோயால், நானும் சிறு வயதில் பாதிக்கப்பட்டேன். என்னை போல், மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, நன்கொடை வழங்கி வருகிறேன்.போலியோ நோய், உலகளவில் கட்டுப்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் இல்லாதவகையில், எதிர் கால சந்ததியினர் உருவாக்குவதே என் வாழ்நாள் லட்சியம்.இவ்வாறு பேசினார்.விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் பாலசுப்ரமணியம், மாவட்ட தலைவர் நிர்மல்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment