FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, October 24, 2014

போலியோவை ஒழிக்க போராடி வரும்ஆஸ்திரேலிய மாற்றுத்திறனாளி பெண்

24.10.2014, ஆத்தூர் :
போலியோவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண், போலியோவை ஒழிக்க, உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, கெயின்ஸ் சன்ரைஸ் பகுதியை சேர்ந்தவர் சுஷேன்னேரியா, 71. அவர், போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், போலியோ நோயை கட்டுப்படுத்த, தனது சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சென்று, ரோட்டரி சங்க விழாவில் பங்கேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நன்கொடை வழங்கி வருகிறார்.ரோட்டரி சங்க விருந்தில் பங்கேற்று, அவருடன் விருந்து சாப்பிடுவோரிடம், 200 ரூபாய் வசூல் செய்து, உணவுக்கு, 50 ரூபாய் போக, மீதம், 150 ரூபாயை வாங்கிக் கொண்டு, அத்தொகையை, போலியோ ஒழிப்புக்கு உதவித் தொகையாக வழங்கி வருகிறார்.நேற்று, ஆத்தூர், சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில், "போலியோவை ஒழிக்க எங்களுடன் சாப்பிட வாருங்கள்' என்ற விழிப்புணர்வு விழா நடந்தது.விழாவில் கலந்து கொண்டு சுஷேன்னேரியா பேசியதாவது:சிறு வயதில், போலியோ நோய் ஏற்பட்டால், மாற்றுத் திறனாளியாகவும், உடல் பலவீனமான நிலை ஏற்படுகிறது. போலியோ நோயால், நானும் சிறு வயதில் பாதிக்கப்பட்டேன். என்னை போல், மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, நன்கொடை வழங்கி வருகிறேன்.போலியோ நோய், உலகளவில் கட்டுப்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் இல்லாதவகையில், எதிர் கால சந்ததியினர் உருவாக்குவதே என் வாழ்நாள் லட்சியம்.இவ்வாறு பேசினார்.விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் பாலசுப்ரமணியம், மாவட்ட தலைவர் நிர்மல்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment