FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, October 27, 2014

இந்திய ரயில்வேயில் பயிற்சியாளர்கள் தேர்வு யுபிஎஸ்சி அறிவிப்பு


இந்திய ரயில்வே துறையில் மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ்களை தேர்ந்தெடுக்க அடுத்த ஆண்டு ஜனவரியில் யுபிஎஸ்சி தேர்வு நடத்த உள்ளது. இதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுடன் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:
ரயில்வே துறை மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ். வயது: 17 வயது முதல் 21க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:
கணிதத்துடன் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றுடன் பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் முதலாமாண்டில் தேர்ச்சி அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி அல்லது சென்னை பல்கலை., மாலை நேரக் கல்லூரியில் பி.ஏ.,/ பி.எஸ்சி 4 ஆண்டு படிப்பில் 3 ஆண்டு படிப்பில் தேர்ச்சி அல்லது 5 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் முதலாண்டு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. ஸ்டேட் பாங்க்கின் ஏதேனும் ஒரு கிளையில் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.11.2014.

No comments:

Post a Comment