FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, October 27, 2014

இந்திய ரயில்வேயில் பயிற்சியாளர்கள் தேர்வு யுபிஎஸ்சி அறிவிப்பு


இந்திய ரயில்வே துறையில் மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ்களை தேர்ந்தெடுக்க அடுத்த ஆண்டு ஜனவரியில் யுபிஎஸ்சி தேர்வு நடத்த உள்ளது. இதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுடன் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:
ரயில்வே துறை மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ். வயது: 17 வயது முதல் 21க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:
கணிதத்துடன் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றுடன் பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் முதலாமாண்டில் தேர்ச்சி அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி அல்லது சென்னை பல்கலை., மாலை நேரக் கல்லூரியில் பி.ஏ.,/ பி.எஸ்சி 4 ஆண்டு படிப்பில் 3 ஆண்டு படிப்பில் தேர்ச்சி அல்லது 5 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் முதலாண்டு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. ஸ்டேட் பாங்க்கின் ஏதேனும் ஒரு கிளையில் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.11.2014.

No comments:

Post a Comment