FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, October 27, 2014

இந்திய ரயில்வேயில் பயிற்சியாளர்கள் தேர்வு யுபிஎஸ்சி அறிவிப்பு


இந்திய ரயில்வே துறையில் மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ்களை தேர்ந்தெடுக்க அடுத்த ஆண்டு ஜனவரியில் யுபிஎஸ்சி தேர்வு நடத்த உள்ளது. இதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுடன் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:
ரயில்வே துறை மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ். வயது: 17 வயது முதல் 21க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:
கணிதத்துடன் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றுடன் பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் முதலாமாண்டில் தேர்ச்சி அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி அல்லது சென்னை பல்கலை., மாலை நேரக் கல்லூரியில் பி.ஏ.,/ பி.எஸ்சி 4 ஆண்டு படிப்பில் 3 ஆண்டு படிப்பில் தேர்ச்சி அல்லது 5 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் முதலாண்டு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. ஸ்டேட் பாங்க்கின் ஏதேனும் ஒரு கிளையில் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.11.2014.

No comments:

Post a Comment