FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, September 2, 2017

செவித்திறன் பள்ளியின் முன்னேற்றத்திற்கு செவி சாய்க்குமா அரசு! பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

30.08.2017
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கருப்பையா என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அதில்,”விருதுநகர் மாவட்டம் சூலக்கரைப் பகுதியில், 1981-ம் ஆண்டு முதல் செவிக்குறைபாடுடைய மாணவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 19 மாணவிகள் உட்பட 49 மாணவர்கள் பயில்கின்றனர். 13 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்தப் பள்ளியில் 27 பணியிடங்கள் உள்ள நிலையில், தலைமை ஆசிரியை, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட ஏழு பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், இந்தப் பள்ளியின் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் 11 அரசுப் பள்ளிகளே உள்ளன. அந்தப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, சூலக்கரை பள்ளியை சீரமைத்துத் தர உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பள்ளியில் 51 மாணவர்கள் உள்ளனர். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பள்ளியில் 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தில் பணியிடம் நிரப்பப்படும். இந்தப் பள்ளியில் 51 மாணவர்களுக்கு 13 ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பள்ளி மற்றும் விடுதியை மேம்படுத்துவதற்கு 20 லட்ச ரூபாய் தேவை எனத் திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து, இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் மாநில ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தீர்ப்புக்காக செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment