FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, September 2, 2017

செவித்திறன் பள்ளியின் முன்னேற்றத்திற்கு செவி சாய்க்குமா அரசு! பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

30.08.2017
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கருப்பையா என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அதில்,”விருதுநகர் மாவட்டம் சூலக்கரைப் பகுதியில், 1981-ம் ஆண்டு முதல் செவிக்குறைபாடுடைய மாணவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 19 மாணவிகள் உட்பட 49 மாணவர்கள் பயில்கின்றனர். 13 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்தப் பள்ளியில் 27 பணியிடங்கள் உள்ள நிலையில், தலைமை ஆசிரியை, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட ஏழு பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், இந்தப் பள்ளியின் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் 11 அரசுப் பள்ளிகளே உள்ளன. அந்தப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, சூலக்கரை பள்ளியை சீரமைத்துத் தர உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பள்ளியில் 51 மாணவர்கள் உள்ளனர். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பள்ளியில் 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தில் பணியிடம் நிரப்பப்படும். இந்தப் பள்ளியில் 51 மாணவர்களுக்கு 13 ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பள்ளி மற்றும் விடுதியை மேம்படுத்துவதற்கு 20 லட்ச ரூபாய் தேவை எனத் திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து, இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் மாநில ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தீர்ப்புக்காக செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment