FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, September 2, 2017

செவித்திறன் பள்ளியின் முன்னேற்றத்திற்கு செவி சாய்க்குமா அரசு! பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

30.08.2017
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கருப்பையா என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அதில்,”விருதுநகர் மாவட்டம் சூலக்கரைப் பகுதியில், 1981-ம் ஆண்டு முதல் செவிக்குறைபாடுடைய மாணவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 19 மாணவிகள் உட்பட 49 மாணவர்கள் பயில்கின்றனர். 13 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்தப் பள்ளியில் 27 பணியிடங்கள் உள்ள நிலையில், தலைமை ஆசிரியை, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட ஏழு பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், இந்தப் பள்ளியின் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் 11 அரசுப் பள்ளிகளே உள்ளன. அந்தப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, சூலக்கரை பள்ளியை சீரமைத்துத் தர உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பள்ளியில் 51 மாணவர்கள் உள்ளனர். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பள்ளியில் 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தில் பணியிடம் நிரப்பப்படும். இந்தப் பள்ளியில் 51 மாணவர்களுக்கு 13 ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பள்ளி மற்றும் விடுதியை மேம்படுத்துவதற்கு 20 லட்ச ரூபாய் தேவை எனத் திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து, இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் மாநில ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தீர்ப்புக்காக செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment