FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, September 2, 2017

செவித்திறன் பள்ளியின் முன்னேற்றத்திற்கு செவி சாய்க்குமா அரசு! பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

30.08.2017
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கருப்பையா என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அதில்,”விருதுநகர் மாவட்டம் சூலக்கரைப் பகுதியில், 1981-ம் ஆண்டு முதல் செவிக்குறைபாடுடைய மாணவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 19 மாணவிகள் உட்பட 49 மாணவர்கள் பயில்கின்றனர். 13 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்தப் பள்ளியில் 27 பணியிடங்கள் உள்ள நிலையில், தலைமை ஆசிரியை, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட ஏழு பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், இந்தப் பள்ளியின் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் 11 அரசுப் பள்ளிகளே உள்ளன. அந்தப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, சூலக்கரை பள்ளியை சீரமைத்துத் தர உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பள்ளியில் 51 மாணவர்கள் உள்ளனர். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பள்ளியில் 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தில் பணியிடம் நிரப்பப்படும். இந்தப் பள்ளியில் 51 மாணவர்களுக்கு 13 ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பள்ளி மற்றும் விடுதியை மேம்படுத்துவதற்கு 20 லட்ச ரூபாய் தேவை எனத் திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து, இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் மாநில ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தீர்ப்புக்காக செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment