FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, September 22, 2017

மனு வாங்க மறுத்த தாசில்தார் : கார் முன் படுத்த காது கேளாத மாற்றுத்திறனாளி

21.09.2017
திருவண்ணாமலை: சான்று வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, வி.ஏ.ஓ., உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செங்கம் தாசில்தார் கார் முன் படுத்து, மாற்றுத் திறனாளி தர்ணாவில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், போயம்பள்ளி தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50; காது கேளாத மாற்றுத் திறனாளி. இவர், அரசு உதவித் தொகை பெற, சான்றுக்காக, கிராம, வி.ஏ.ஓ.,வின் உதவியாளர் குப்பன், 45, என்பவரை, ஓராண்டாக அணுகி வருகிறார்.
குப்பன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என, ரவி கூறினார். இதனால், சான்று வழங்காமல் அலைக்கழித்தார். இந்நிலையில், செங்கம் அரசு பள்ளியில், உள்ளாட்சி தேர்தல் பணி குறித்த பயிற்சி முகாம், நேற்று நடந்தது. இதில், செங்கம் தாசில்தார் உதயகுமார் பங்கேற்றார். அப்போது, கிராம உதவியாளர் லஞ்சம் கேட்பது குறித்து, தாசில்தாரிடம் ரவி மனு அளித்தார். மனுவை வாங்க மறுத்த தாசில்தார், காரில் ஏறி புறப்பட தயாரானார். உடனே ரவி, தாசில்தார் காரின் முன் படுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த ஊழியர்கள், அவரை அப்புறப்படுத்தி, தாசில்தாரை அனுப்பி வைத்தனர். 

மனுவை தாசில்தார் வாங்க மறுத்த சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment