FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, September 22, 2017

மனு வாங்க மறுத்த தாசில்தார் : கார் முன் படுத்த காது கேளாத மாற்றுத்திறனாளி

21.09.2017
திருவண்ணாமலை: சான்று வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, வி.ஏ.ஓ., உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செங்கம் தாசில்தார் கார் முன் படுத்து, மாற்றுத் திறனாளி தர்ணாவில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், போயம்பள்ளி தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50; காது கேளாத மாற்றுத் திறனாளி. இவர், அரசு உதவித் தொகை பெற, சான்றுக்காக, கிராம, வி.ஏ.ஓ.,வின் உதவியாளர் குப்பன், 45, என்பவரை, ஓராண்டாக அணுகி வருகிறார்.
குப்பன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என, ரவி கூறினார். இதனால், சான்று வழங்காமல் அலைக்கழித்தார். இந்நிலையில், செங்கம் அரசு பள்ளியில், உள்ளாட்சி தேர்தல் பணி குறித்த பயிற்சி முகாம், நேற்று நடந்தது. இதில், செங்கம் தாசில்தார் உதயகுமார் பங்கேற்றார். அப்போது, கிராம உதவியாளர் லஞ்சம் கேட்பது குறித்து, தாசில்தாரிடம் ரவி மனு அளித்தார். மனுவை வாங்க மறுத்த தாசில்தார், காரில் ஏறி புறப்பட தயாரானார். உடனே ரவி, தாசில்தார் காரின் முன் படுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த ஊழியர்கள், அவரை அப்புறப்படுத்தி, தாசில்தாரை அனுப்பி வைத்தனர். 

மனுவை தாசில்தார் வாங்க மறுத்த சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment