FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, September 22, 2017

மனு வாங்க மறுத்த தாசில்தார் : கார் முன் படுத்த காது கேளாத மாற்றுத்திறனாளி

21.09.2017
திருவண்ணாமலை: சான்று வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, வி.ஏ.ஓ., உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செங்கம் தாசில்தார் கார் முன் படுத்து, மாற்றுத் திறனாளி தர்ணாவில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், போயம்பள்ளி தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50; காது கேளாத மாற்றுத் திறனாளி. இவர், அரசு உதவித் தொகை பெற, சான்றுக்காக, கிராம, வி.ஏ.ஓ.,வின் உதவியாளர் குப்பன், 45, என்பவரை, ஓராண்டாக அணுகி வருகிறார்.
குப்பன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என, ரவி கூறினார். இதனால், சான்று வழங்காமல் அலைக்கழித்தார். இந்நிலையில், செங்கம் அரசு பள்ளியில், உள்ளாட்சி தேர்தல் பணி குறித்த பயிற்சி முகாம், நேற்று நடந்தது. இதில், செங்கம் தாசில்தார் உதயகுமார் பங்கேற்றார். அப்போது, கிராம உதவியாளர் லஞ்சம் கேட்பது குறித்து, தாசில்தாரிடம் ரவி மனு அளித்தார். மனுவை வாங்க மறுத்த தாசில்தார், காரில் ஏறி புறப்பட தயாரானார். உடனே ரவி, தாசில்தார் காரின் முன் படுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த ஊழியர்கள், அவரை அப்புறப்படுத்தி, தாசில்தாரை அனுப்பி வைத்தனர். 

மனுவை தாசில்தார் வாங்க மறுத்த சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment