FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, September 22, 2017

மனு வாங்க மறுத்த தாசில்தார் : கார் முன் படுத்த காது கேளாத மாற்றுத்திறனாளி

21.09.2017
திருவண்ணாமலை: சான்று வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, வி.ஏ.ஓ., உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செங்கம் தாசில்தார் கார் முன் படுத்து, மாற்றுத் திறனாளி தர்ணாவில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், போயம்பள்ளி தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50; காது கேளாத மாற்றுத் திறனாளி. இவர், அரசு உதவித் தொகை பெற, சான்றுக்காக, கிராம, வி.ஏ.ஓ.,வின் உதவியாளர் குப்பன், 45, என்பவரை, ஓராண்டாக அணுகி வருகிறார்.
குப்பன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என, ரவி கூறினார். இதனால், சான்று வழங்காமல் அலைக்கழித்தார். இந்நிலையில், செங்கம் அரசு பள்ளியில், உள்ளாட்சி தேர்தல் பணி குறித்த பயிற்சி முகாம், நேற்று நடந்தது. இதில், செங்கம் தாசில்தார் உதயகுமார் பங்கேற்றார். அப்போது, கிராம உதவியாளர் லஞ்சம் கேட்பது குறித்து, தாசில்தாரிடம் ரவி மனு அளித்தார். மனுவை வாங்க மறுத்த தாசில்தார், காரில் ஏறி புறப்பட தயாரானார். உடனே ரவி, தாசில்தார் காரின் முன் படுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த ஊழியர்கள், அவரை அப்புறப்படுத்தி, தாசில்தாரை அனுப்பி வைத்தனர். 

மனுவை தாசில்தார் வாங்க மறுத்த சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment