FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, September 20, 2017

செவித்திறன் குன்றியோர் பள்ளியை மேம்படுத்த உத்தரவு

19.09.2017
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அலங்காநல்லுார் கருப்பையா தாக்கல் செய்த பொதுநல மனு: விருதுநகர் சூலக்கரையில், செவித்திறன்குன்றியோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மற்றும் விடுதி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். போதிய கழிப்பறை, குடிநீர் வசதி செய்ய வேண்டும். 'இன்டர்நெட்' இணைப்பு வழங்க வேண்டும்.

நகல் எடுக்கும் இயந்திரம் நிறுவ வேண்டும். தலைமை ஆசிரியர் உட்பட இதர காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுபோல் மாநிலத்தில், 10 பள்ளிகள் போதிய வசதிகள், ஊழியர்கள் இன்றி உள்ளதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். இவற்றை மேம்படுத்த, தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் இதர வசதிகள் செய்ய அரசின் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்துத்துறை முதன்மை செயலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரக கமிஷனரும் பொது நலன் கருதி நடவடிக்கை எடுப்பர் என, இந்நீதிமன்றம் நம்புகிறது. வழக்கை பைசல் செய்கிறோம்.

இவ்வாறு உத்தரவில் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment