FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, September 20, 2017

செவித்திறன் குன்றியோர் பள்ளியை மேம்படுத்த உத்தரவு

19.09.2017
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அலங்காநல்லுார் கருப்பையா தாக்கல் செய்த பொதுநல மனு: விருதுநகர் சூலக்கரையில், செவித்திறன்குன்றியோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மற்றும் விடுதி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். போதிய கழிப்பறை, குடிநீர் வசதி செய்ய வேண்டும். 'இன்டர்நெட்' இணைப்பு வழங்க வேண்டும்.

நகல் எடுக்கும் இயந்திரம் நிறுவ வேண்டும். தலைமை ஆசிரியர் உட்பட இதர காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுபோல் மாநிலத்தில், 10 பள்ளிகள் போதிய வசதிகள், ஊழியர்கள் இன்றி உள்ளதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். இவற்றை மேம்படுத்த, தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் இதர வசதிகள் செய்ய அரசின் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்துத்துறை முதன்மை செயலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரக கமிஷனரும் பொது நலன் கருதி நடவடிக்கை எடுப்பர் என, இந்நீதிமன்றம் நம்புகிறது. வழக்கை பைசல் செய்கிறோம்.

இவ்வாறு உத்தரவில் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment