FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, September 20, 2017

செவித்திறன் குன்றியோர் பள்ளியை மேம்படுத்த உத்தரவு

19.09.2017
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அலங்காநல்லுார் கருப்பையா தாக்கல் செய்த பொதுநல மனு: விருதுநகர் சூலக்கரையில், செவித்திறன்குன்றியோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மற்றும் விடுதி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். போதிய கழிப்பறை, குடிநீர் வசதி செய்ய வேண்டும். 'இன்டர்நெட்' இணைப்பு வழங்க வேண்டும்.

நகல் எடுக்கும் இயந்திரம் நிறுவ வேண்டும். தலைமை ஆசிரியர் உட்பட இதர காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுபோல் மாநிலத்தில், 10 பள்ளிகள் போதிய வசதிகள், ஊழியர்கள் இன்றி உள்ளதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். இவற்றை மேம்படுத்த, தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் இதர வசதிகள் செய்ய அரசின் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்துத்துறை முதன்மை செயலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரக கமிஷனரும் பொது நலன் கருதி நடவடிக்கை எடுப்பர் என, இந்நீதிமன்றம் நம்புகிறது. வழக்கை பைசல் செய்கிறோம்.

இவ்வாறு உத்தரவில் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment