FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, September 27, 2017

செவித்திறன், பேச்சுத்திறன் பயிற்சி கல்லூரி வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும்!


திருச்சி, செப்.27 செவித்திறன், பேச்சுத்திறன் பயிற்சி கல்லூரி வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி கூறினார்.

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று (செப்.27) காலை 11 மணிக்கு நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மதராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், உலகப் புகழ்பெற்ற காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை நிபுணருமான பத்மசிறீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் தமது உரையில்,

உயிர்காக்கும் மருத்துவத் துறை என்பது நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அவ்வளர்ச்சிக்கேற்ப மருந்தாளுநர்கள், தொழில் நுட்பத்துடன் கூடிய ஆராய்ச்சி அறிவினை வளர்த்துக் கொள்வதோடு, சேவை மனப்பான்மையோடும் பணியாற்ற வேண்டுமெனக் கூறி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்துப் பேசும்போது,

நலவாழ்வு என்பது அனைவரையும் சென்றடையவேண்டும்.மருத்துவசிகிச்சை முறைகளில்ஏழை,பணக் காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கும் மருந்தாளுநராக ஒவ் வொருவரும் உருவாக வேண்டும். அத்தகைய தொண்டற மனப்பான்மையோடு மாணவர்கள் சமுதாயத்தில் செயல்படவேண்டும். மேலும் செவித்திறன், பேச்சுத் திறன் பயிற்சிகளுக்காக வரும் கல்வி யாண்டில் கல்லூரி தொடங்கப்படும் என்று கூறினார். பின்னர் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும்,பாராட்டு களையும் தெரிவித்துக்கொண்டார். இவ் விழாவிற்கு பெரியார் மணியம்மை பல் கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞான.செபஸ்தியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை ஆண்டறிக்கை வாசித்தார்.

முன்னதாக பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இப்பட்டமளிப்பு விழாவில் 38 முதுநிலை மருந்தியல் மாணவர்களும், 107 இளநிலை மருந் தியல் மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.

No comments:

Post a Comment