FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, September 13, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம்: விண்ணப்பதாரர்களுக்கு தகுதிகள்

சென்னை, செப். 12–
சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் இதுவரை தையல் இயந்திரம் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்கவேண்டும். கல்வித்தகுதி தேவை இல்லை எனினும் வயது 18 முதல் 45 வரை இருத்தல் வேண்டும், வருமான வரம்பு ஏதும் இல்லை. அரசு அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்து தையல் தெரியும் எனச் சான்று பெற்று இருத்தல் வேண்டும். இத்தகுதி உடையவர்கள் காது கேளாத மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வெள்ளைத்தாளில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மேலே கேட்கப்பட்டுள்ள தகுதிகளின் நகல்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், டி.எம்.எஸ் வளாகம், சென்னை (தொலைபேசி எண் 044-2431 5758) என்ற முகவரியில் விண்ணப்பிக்கவும். இவ்வாறு கலெக்டர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment