FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, September 13, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம்: விண்ணப்பதாரர்களுக்கு தகுதிகள்

சென்னை, செப். 12–
சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் இதுவரை தையல் இயந்திரம் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்கவேண்டும். கல்வித்தகுதி தேவை இல்லை எனினும் வயது 18 முதல் 45 வரை இருத்தல் வேண்டும், வருமான வரம்பு ஏதும் இல்லை. அரசு அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்து தையல் தெரியும் எனச் சான்று பெற்று இருத்தல் வேண்டும். இத்தகுதி உடையவர்கள் காது கேளாத மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வெள்ளைத்தாளில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மேலே கேட்கப்பட்டுள்ள தகுதிகளின் நகல்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், டி.எம்.எஸ் வளாகம், சென்னை (தொலைபேசி எண் 044-2431 5758) என்ற முகவரியில் விண்ணப்பிக்கவும். இவ்வாறு கலெக்டர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment