FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, September 13, 2017

புதிய "தமிழ்நாடு மாநில காதுகேளாத மகளிர் சங்கம்" தொடக்க விழா


10.09.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று AWARENESS ON DEAF WOMEN EMPOWERMENT AND ELECTION – சிறப்பு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் இருந்தும் காதுகேளாதோர் பெண்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 3 பெண்களும் கலந்து கொண்டனர். TNSFD தலைவர் ஜமால் அலி, TNSFD துணை தலைவர் மோகன், TNSFD துணை செயலாளர் ரமேஷ்பாபு, DLF நிறுவினர் முரளி, KDDA செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் NDWAD செயலாளர் கலந்து கொண்டு மிக சிறப்பாக சைகை மொழியில் உரையாற்றினார்கள். பின்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பெயர்கள் பின்வருமாறு
  • துணை சேர்மன் : G.B.சுதா (கோவை)
  • தலைவர்: S.நித்யா (தர்மபுரி)
  • துணை தலைவர்: K.செண்பகம் (கோவை)
  • செயலாளர்: M.காயத்ரி (கிருஷ்ணகிரி)
  • துணை செயலாளர்: K.தேவதா (சென்னை)
  • பொருளாளர்: K.ராணி (கோவை)
கமிட்டி செயற்குழு உறுப்பினர்கள்:
  • B.சுகன்யா (நாகப்பட்டினம்)
  • D.சுதா (திருச்சி)
  • சங்கீதா பிரியா (சென்னை)
  • B.அமுதா (நாமக்கல்)
  • R.நாயகி (கிருஷ்ணகிரி)
  • R.தேபிதில் (வேலூர்)
மேலும் வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர், செயலாளர் சிறப்பாக உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்தார்.

No comments:

Post a Comment