FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, September 13, 2017

காது கேளாதோருக்கான எஸ்.வி. பள்ளி: தத்தெடுத்த தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி

திருப்பதியில் தத்தெடுத்த எஸ்.வி. காது கேளாதோர் பள்ளியை
சுத்தப்படுத்தும் தேவஸ்தான தலைமை
பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா
மற்றும் கண்காணிப்பு ஊழியர்கள்.
13.09.2017
திருப்பதியில் உள்ள காது கேளாதோருக்கான ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தான பள்ளியை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா நேற்று தத்தெடுத்தார்.

திருப்பதி அலிபிரி அருகே காது கேளாதோருக்கான ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தான பள்ளி உள்ளது. இந்த பள்ளி முறையான பராமரிப்பின்றி இருந்தது. ஆதலால், இதை தத்தெடுத்துக்கொள்ள விரும்புவதாக தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா தலைமை தேவஸ்தான அதிகாரிக்கு விண்ணப்பித்தார். இதற்கு அனுமதி வழங்கியதையடுத்து, சுமார் 150 கண்காணிப்பு ஊழியர்களுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா காது கேளாதோர் பள்ளியை சுத்தப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இப்பள்ளிக்கு வெளிநாட்டில் வாழும் இந்திய பக்தர்கள் பலர் உதவ முன் வந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment