FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, September 13, 2017

காது கேளாதோருக்கான எஸ்.வி. பள்ளி: தத்தெடுத்த தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி

திருப்பதியில் தத்தெடுத்த எஸ்.வி. காது கேளாதோர் பள்ளியை
சுத்தப்படுத்தும் தேவஸ்தான தலைமை
பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா
மற்றும் கண்காணிப்பு ஊழியர்கள்.
13.09.2017
திருப்பதியில் உள்ள காது கேளாதோருக்கான ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தான பள்ளியை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா நேற்று தத்தெடுத்தார்.

திருப்பதி அலிபிரி அருகே காது கேளாதோருக்கான ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தான பள்ளி உள்ளது. இந்த பள்ளி முறையான பராமரிப்பின்றி இருந்தது. ஆதலால், இதை தத்தெடுத்துக்கொள்ள விரும்புவதாக தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா தலைமை தேவஸ்தான அதிகாரிக்கு விண்ணப்பித்தார். இதற்கு அனுமதி வழங்கியதையடுத்து, சுமார் 150 கண்காணிப்பு ஊழியர்களுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா காது கேளாதோர் பள்ளியை சுத்தப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இப்பள்ளிக்கு வெளிநாட்டில் வாழும் இந்திய பக்தர்கள் பலர் உதவ முன் வந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment