FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, September 13, 2017

காது கேளாதோருக்கான எஸ்.வி. பள்ளி: தத்தெடுத்த தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி

திருப்பதியில் தத்தெடுத்த எஸ்.வி. காது கேளாதோர் பள்ளியை
சுத்தப்படுத்தும் தேவஸ்தான தலைமை
பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா
மற்றும் கண்காணிப்பு ஊழியர்கள்.
13.09.2017
திருப்பதியில் உள்ள காது கேளாதோருக்கான ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தான பள்ளியை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா நேற்று தத்தெடுத்தார்.

திருப்பதி அலிபிரி அருகே காது கேளாதோருக்கான ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தான பள்ளி உள்ளது. இந்த பள்ளி முறையான பராமரிப்பின்றி இருந்தது. ஆதலால், இதை தத்தெடுத்துக்கொள்ள விரும்புவதாக தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா தலைமை தேவஸ்தான அதிகாரிக்கு விண்ணப்பித்தார். இதற்கு அனுமதி வழங்கியதையடுத்து, சுமார் 150 கண்காணிப்பு ஊழியர்களுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா காது கேளாதோர் பள்ளியை சுத்தப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இப்பள்ளிக்கு வெளிநாட்டில் வாழும் இந்திய பக்தர்கள் பலர் உதவ முன் வந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment