FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, September 4, 2017

குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி (Cochlear Implants)


04.09.2017 மதுரை : 
''பிறவியிலேயே செவித்திறன் பாதித்த 50 குழந்தைகளுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை சிகிச்சை மூலம் காது கருவி பொருத்தப்பட்டுள்ளதாக,'' காது மூக்கு தொண்டை பிரிவு துறைதலைவர் தினகரன் பேசினார்.மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை ஆப்பரேஷனில் காதுகருவி பொருத்துதல் குறித்த கருத்தரங்கு நடந்தது. டீன் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ஷீலா மல்லிகா ராணி முன்னிலை வகித்தார். சென்னை காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர் மோகன் காமேஸ்வரன் நவீன சிகிச்சை குறித்து பேசினார்.

காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் தினகரன் பேசியதாவது:பிறவியிலேயே காது கேட்காத 1 முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுண்துளை ஆபரேஷன் மூலம் காதுகருவி பொருத்தும் பணி 2016 ஜனவரியில் இங்கு துவங்கியது. இதன் மூலம் 50 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். ஆப்பரேஷன் முடிந்த பின் ஒரு ஆண்டு பேச்சு பயிற்சி அளிக்கப்படும்.பின்னர், பிற குழந்தைகளை போல பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.இந்த அறுவை சிகிச்சையில் தமிழகத்தில் மதுரை 3 வது இடத்தில் உள்ளது.பிறவியில் செவித்திறன் பாதித்த குழந்தைகளின், பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை அழைத்து வந்து செவித்திறன் பெறச் செய்யலாம், என்றார்.

No comments:

Post a Comment