FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, September 4, 2017

குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி (Cochlear Implants)


04.09.2017 மதுரை : 
''பிறவியிலேயே செவித்திறன் பாதித்த 50 குழந்தைகளுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை சிகிச்சை மூலம் காது கருவி பொருத்தப்பட்டுள்ளதாக,'' காது மூக்கு தொண்டை பிரிவு துறைதலைவர் தினகரன் பேசினார்.மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை ஆப்பரேஷனில் காதுகருவி பொருத்துதல் குறித்த கருத்தரங்கு நடந்தது. டீன் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ஷீலா மல்லிகா ராணி முன்னிலை வகித்தார். சென்னை காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர் மோகன் காமேஸ்வரன் நவீன சிகிச்சை குறித்து பேசினார்.

காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் தினகரன் பேசியதாவது:பிறவியிலேயே காது கேட்காத 1 முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுண்துளை ஆபரேஷன் மூலம் காதுகருவி பொருத்தும் பணி 2016 ஜனவரியில் இங்கு துவங்கியது. இதன் மூலம் 50 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். ஆப்பரேஷன் முடிந்த பின் ஒரு ஆண்டு பேச்சு பயிற்சி அளிக்கப்படும்.பின்னர், பிற குழந்தைகளை போல பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.இந்த அறுவை சிகிச்சையில் தமிழகத்தில் மதுரை 3 வது இடத்தில் உள்ளது.பிறவியில் செவித்திறன் பாதித்த குழந்தைகளின், பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை அழைத்து வந்து செவித்திறன் பெறச் செய்யலாம், என்றார்.

No comments:

Post a Comment