FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, September 4, 2017

குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி (Cochlear Implants)


04.09.2017 மதுரை : 
''பிறவியிலேயே செவித்திறன் பாதித்த 50 குழந்தைகளுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை சிகிச்சை மூலம் காது கருவி பொருத்தப்பட்டுள்ளதாக,'' காது மூக்கு தொண்டை பிரிவு துறைதலைவர் தினகரன் பேசினார்.மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை ஆப்பரேஷனில் காதுகருவி பொருத்துதல் குறித்த கருத்தரங்கு நடந்தது. டீன் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ஷீலா மல்லிகா ராணி முன்னிலை வகித்தார். சென்னை காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர் மோகன் காமேஸ்வரன் நவீன சிகிச்சை குறித்து பேசினார்.

காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் தினகரன் பேசியதாவது:பிறவியிலேயே காது கேட்காத 1 முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுண்துளை ஆபரேஷன் மூலம் காதுகருவி பொருத்தும் பணி 2016 ஜனவரியில் இங்கு துவங்கியது. இதன் மூலம் 50 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். ஆப்பரேஷன் முடிந்த பின் ஒரு ஆண்டு பேச்சு பயிற்சி அளிக்கப்படும்.பின்னர், பிற குழந்தைகளை போல பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.இந்த அறுவை சிகிச்சையில் தமிழகத்தில் மதுரை 3 வது இடத்தில் உள்ளது.பிறவியில் செவித்திறன் பாதித்த குழந்தைகளின், பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை அழைத்து வந்து செவித்திறன் பெறச் செய்யலாம், என்றார்.

No comments:

Post a Comment