FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, September 4, 2017

குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி (Cochlear Implants)


04.09.2017 மதுரை : 
''பிறவியிலேயே செவித்திறன் பாதித்த 50 குழந்தைகளுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை சிகிச்சை மூலம் காது கருவி பொருத்தப்பட்டுள்ளதாக,'' காது மூக்கு தொண்டை பிரிவு துறைதலைவர் தினகரன் பேசினார்.மதுரை அரசு மருத்துவமனையில் நுண்துளை ஆப்பரேஷனில் காதுகருவி பொருத்துதல் குறித்த கருத்தரங்கு நடந்தது. டீன் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ஷீலா மல்லிகா ராணி முன்னிலை வகித்தார். சென்னை காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர் மோகன் காமேஸ்வரன் நவீன சிகிச்சை குறித்து பேசினார்.

காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் தினகரன் பேசியதாவது:பிறவியிலேயே காது கேட்காத 1 முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுண்துளை ஆபரேஷன் மூலம் காதுகருவி பொருத்தும் பணி 2016 ஜனவரியில் இங்கு துவங்கியது. இதன் மூலம் 50 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். ஆப்பரேஷன் முடிந்த பின் ஒரு ஆண்டு பேச்சு பயிற்சி அளிக்கப்படும்.பின்னர், பிற குழந்தைகளை போல பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.இந்த அறுவை சிகிச்சையில் தமிழகத்தில் மதுரை 3 வது இடத்தில் உள்ளது.பிறவியில் செவித்திறன் பாதித்த குழந்தைகளின், பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை அழைத்து வந்து செவித்திறன் பெறச் செய்யலாம், என்றார்.

No comments:

Post a Comment