FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, November 22, 2017

ஹலோ பிறந்த கதை...

22.11.2017
தொலைபேசியை கண்டு பிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பது மட்டும் நமக்கு தெரியும். அதை கண்டுபிடிக்க அவருக்கு ஊக்கமாக இருந்தது எது? என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் தந்தை மெல்வில்பில். இவர் பிறவியிலேயே வாய் பேசவும், காது கேட்கவும் இயலாதவர். அதனால் மற்றவர்கள் பேசும் வாய் அசைவுகளை வைத்து எப்படி கருத்துகளை புரிந்து கொள்ள முடியும், விளக்க முடியும் என்று ஒரு புத்தகம் எழுதி அதன் மூலம் பிரபலமானார். தந்தையின் காது கேளாத, வாய் பேசமுடியாத நிலைதான் அலெக்சாண்டர் கிரகாம்பெல்லை ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. 1871ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஒரு காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த கிரகாம்பெல், செவிட்டுத் தன்மையை நீக்கி ஒலியை உணர்வதற்கான கருவி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். காது கேட்காதவர்களுக்கு செயற்கை காது பொருத்த முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதனால் இறந்தவர்களின் காதுகளை அறுத்தும் ஆய்வு செய்தார்.

1874ம் ஆண்டில் தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் என்பவருடன் போஸ்டன் நகரில் தங்கி இருந்த போது கம்பி மூலம் ஒலியை அனுப்பி கேட்க முடியுமா என்றும் ஆய்வு செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அவர் கண்டுபிடித்த கருவி வேலை செய்யவில்லை. கோபத்தில் இருந்த அவர் வேகமாக எழுந்த போது அருகில் இருந்த அமிலம் அவர் மேல் கொட்டி விட்டது. அதனால் உதவிக்கு தனது வாட்சனை கத்தி அழைத்தார். அவர் அழைத்தது கீழ் அறையில் இருந்த வாட்சனுக்கு கேட்டது. எப்படி கேட்டது. அவர் கண்டுபிடித்த டிரான்ஸ் மிஷின் முன்பு நின்று கத்தியுள்ளார். அதனால் அது வேலை செய்வதாக உறுதிப் படுத்தினார்.

அதற்கு பிறகு பல முயற்சிகளின் அடிப்படையில் கம்பி மூலம் பேசும் தொலை பேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் அதை வர்த்தகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதை பலருக்கு செயல்விளக்கம் செய்து காட்டினார். குறிப்பாக விக்டோரியா ராணி முன்பு செய்து காட்டினார். அந்த செயல்விளக்கம் செய்யும் போது அவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘‘ஹலோ’’ என்ற வார்த்தைதான்.

இந்த ‘‘ஹலோ’’ என்ற வார்த்தை ஒரு பெண்ணின் பெயர். யார் அந்த பெண் என்ற கேள்வி நமக்கு தோன்றும். அவர் வேறு யாருமல்ல. அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் காதலிதான். மார்கரெட் ஹலோ என்பது அவர் பெயர். அதை சுருக்கி ஹலோ என்று அழைத்தார் கிரகாம்பெல். டெலிபோன் பேசுவோர் எல்லோரும் அவரது காதலியின் பெயரை உச்சரிக்கும்படி செய்துவிட்டார். ஆனால், கப்பலில் உச்சரிக்கப்படும் ‘‘அஹாய்’’ எனப்படும் சொல்லைத்தான் கிரகாம்பெல் ஹலோ என்று மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1876ம் ஆண்டு முழுமையான தொலைபேசி முறையை வர்த்தகப்படுத்தினார். அப்போது தொலை பேசி இணைப்பு கேட்டு வெறும் 8 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்தனர். 1922ம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம்பெல் இறந்த போது, அமெரிக்கர்கள் ஒரு நிமிட நேரம் தொலைபேசிகளை இயங்காமல் வைத்து கிரகாம்பெல்லுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment