FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, November 22, 2017

ஹலோ பிறந்த கதை...

22.11.2017
தொலைபேசியை கண்டு பிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பது மட்டும் நமக்கு தெரியும். அதை கண்டுபிடிக்க அவருக்கு ஊக்கமாக இருந்தது எது? என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் தந்தை மெல்வில்பில். இவர் பிறவியிலேயே வாய் பேசவும், காது கேட்கவும் இயலாதவர். அதனால் மற்றவர்கள் பேசும் வாய் அசைவுகளை வைத்து எப்படி கருத்துகளை புரிந்து கொள்ள முடியும், விளக்க முடியும் என்று ஒரு புத்தகம் எழுதி அதன் மூலம் பிரபலமானார். தந்தையின் காது கேளாத, வாய் பேசமுடியாத நிலைதான் அலெக்சாண்டர் கிரகாம்பெல்லை ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. 1871ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஒரு காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த கிரகாம்பெல், செவிட்டுத் தன்மையை நீக்கி ஒலியை உணர்வதற்கான கருவி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். காது கேட்காதவர்களுக்கு செயற்கை காது பொருத்த முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதனால் இறந்தவர்களின் காதுகளை அறுத்தும் ஆய்வு செய்தார்.

1874ம் ஆண்டில் தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் என்பவருடன் போஸ்டன் நகரில் தங்கி இருந்த போது கம்பி மூலம் ஒலியை அனுப்பி கேட்க முடியுமா என்றும் ஆய்வு செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அவர் கண்டுபிடித்த கருவி வேலை செய்யவில்லை. கோபத்தில் இருந்த அவர் வேகமாக எழுந்த போது அருகில் இருந்த அமிலம் அவர் மேல் கொட்டி விட்டது. அதனால் உதவிக்கு தனது வாட்சனை கத்தி அழைத்தார். அவர் அழைத்தது கீழ் அறையில் இருந்த வாட்சனுக்கு கேட்டது. எப்படி கேட்டது. அவர் கண்டுபிடித்த டிரான்ஸ் மிஷின் முன்பு நின்று கத்தியுள்ளார். அதனால் அது வேலை செய்வதாக உறுதிப் படுத்தினார்.

அதற்கு பிறகு பல முயற்சிகளின் அடிப்படையில் கம்பி மூலம் பேசும் தொலை பேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் அதை வர்த்தகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதை பலருக்கு செயல்விளக்கம் செய்து காட்டினார். குறிப்பாக விக்டோரியா ராணி முன்பு செய்து காட்டினார். அந்த செயல்விளக்கம் செய்யும் போது அவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘‘ஹலோ’’ என்ற வார்த்தைதான்.

இந்த ‘‘ஹலோ’’ என்ற வார்த்தை ஒரு பெண்ணின் பெயர். யார் அந்த பெண் என்ற கேள்வி நமக்கு தோன்றும். அவர் வேறு யாருமல்ல. அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் காதலிதான். மார்கரெட் ஹலோ என்பது அவர் பெயர். அதை சுருக்கி ஹலோ என்று அழைத்தார் கிரகாம்பெல். டெலிபோன் பேசுவோர் எல்லோரும் அவரது காதலியின் பெயரை உச்சரிக்கும்படி செய்துவிட்டார். ஆனால், கப்பலில் உச்சரிக்கப்படும் ‘‘அஹாய்’’ எனப்படும் சொல்லைத்தான் கிரகாம்பெல் ஹலோ என்று மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1876ம் ஆண்டு முழுமையான தொலைபேசி முறையை வர்த்தகப்படுத்தினார். அப்போது தொலை பேசி இணைப்பு கேட்டு வெறும் 8 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்தனர். 1922ம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம்பெல் இறந்த போது, அமெரிக்கர்கள் ஒரு நிமிட நேரம் தொலைபேசிகளை இயங்காமல் வைத்து கிரகாம்பெல்லுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment