FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, November 30, 2017

சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை கொளுத்தி மாதர் சங்கம் மற்றும் மாற்று திறனாளி சங்கம் போராட்டம்..!

28.11.2017
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சில சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வல்லுறவு செய்தனர். ஆளும் அதிமுக-வின் செல்வாக்கோடு செயல்படும் இந்த சமூகவிரோத குற்றவாளிகளில் அந்த ஊராட்சியின் வார்டு கவுன்சிலரான சித்தலிங்கா என்பவரும் அடக்கம்.

இந்த வழக்கில் ஆரம்பம் முதல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் உள்ளூர் ஊர்தலைவர்கள், காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டது. சுமார் ஒருவார காலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது மகள் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டதை அவருடைய தந்தை பலமுறை வலியுறுத்தியும். அதற்கான உரிய நடவடிக்கையை அங்கிருந்த மருத்துவர்கள் யாரும் எடுக்கவில்லை.

சுமார் ஒருவார காலத்திற்குப் பின்னர் தகவல் அறிந்து மாற்று திறனாளிகள் சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் தலையிட்டு போராட்டம் அறிவித்த பின்னரே, பெயரளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். எனினும், காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு நிர்வாகமும், குற்றவாளிகளுக்கு சாதகமாகவே மீண்டும் மீண்டும் செயல்பட்டதால், மாற்றுத்திறனாளி சிறுமியின் தந்தை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டது. 2015 செப்டம்பர் மாதத்தில், இந்த வழக்கு சிபி-சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்த பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமியையே புணையப்பட்ட புகார்களைக் கூறி குற்றவாளியாக்கி, மோசடியான, ஒருதலைப்பட்சமான, விசாரணை அறிக்கை ஒன்றை சிபி-சிஐடி தயாரித்துள்ளது.

சிபி-சிஐடியின் இந்த மோசடி அறிக்கையை எரிக்கும் போராட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் நவ-28 அன்று நடைபெற்றது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத்தலைவர் பா.ஜான்ஸிராணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினர்.

No comments:

Post a Comment