FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, January 8, 2019

மார்த்தாண்டம் அருகே அதிர்ச்சி; காணாமல் போன காது கேளாத 10 வயது மாணவன் பிணமாக மீட்பு!

03.01.2019
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகன் ஹரி பிரசாத்(10). இவன் நாகர்கோவிலில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்தார்.

நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார். அப்பகுதியில் ஐஸ் விற்க வந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பல இடங்களில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடினர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை சுபாஷ் வீட்டிற்கு அருகிலுள்ள குட்டையில் ஹரி பிரசாத் பிணமாக கிடந்தார். அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

வாய்பேச முடியாத சிறுவனின் உயிரிழப்பால் உறவினர்கள் மற்றும் அப்பகுதியியை சேர்ந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment