FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 8, 2019

மார்த்தாண்டம் அருகே அதிர்ச்சி; காணாமல் போன காது கேளாத 10 வயது மாணவன் பிணமாக மீட்பு!

03.01.2019
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகன் ஹரி பிரசாத்(10). இவன் நாகர்கோவிலில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்தார்.

நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார். அப்பகுதியில் ஐஸ் விற்க வந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பல இடங்களில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடினர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை சுபாஷ் வீட்டிற்கு அருகிலுள்ள குட்டையில் ஹரி பிரசாத் பிணமாக கிடந்தார். அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

வாய்பேச முடியாத சிறுவனின் உயிரிழப்பால் உறவினர்கள் மற்றும் அப்பகுதியியை சேர்ந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment