FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, January 8, 2019

மார்த்தாண்டம் அருகே அதிர்ச்சி; காணாமல் போன காது கேளாத 10 வயது மாணவன் பிணமாக மீட்பு!

03.01.2019
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகன் ஹரி பிரசாத்(10). இவன் நாகர்கோவிலில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்தார்.

நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார். அப்பகுதியில் ஐஸ் விற்க வந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பல இடங்களில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடினர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை சுபாஷ் வீட்டிற்கு அருகிலுள்ள குட்டையில் ஹரி பிரசாத் பிணமாக கிடந்தார். அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

வாய்பேச முடியாத சிறுவனின் உயிரிழப்பால் உறவினர்கள் மற்றும் அப்பகுதியியை சேர்ந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment