FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, January 8, 2019

மார்த்தாண்டம் அருகே அதிர்ச்சி; காணாமல் போன காது கேளாத 10 வயது மாணவன் பிணமாக மீட்பு!

03.01.2019
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகன் ஹரி பிரசாத்(10). இவன் நாகர்கோவிலில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்தார்.

நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார். அப்பகுதியில் ஐஸ் விற்க வந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பல இடங்களில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடினர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை சுபாஷ் வீட்டிற்கு அருகிலுள்ள குட்டையில் ஹரி பிரசாத் பிணமாக கிடந்தார். அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

வாய்பேச முடியாத சிறுவனின் உயிரிழப்பால் உறவினர்கள் மற்றும் அப்பகுதியியை சேர்ந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment