FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 12, 2019

மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் நடத்த ரூ.25 ஆயிரம் மானியம் கலெக்டர் ராமன் தகவல்

10.01.2019, வேலூர்,
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்வுநாள் கூட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, சமூக பாதுகாப்புத்துறை தனித்துணை ஆட்சியர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் ராமன் தலைமை தாங்கி கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் ஒருவருக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு காதொலி கருவி ஆகியவற்றை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 5–ந் தேதி நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2,400 பேர் பங்கேற்றனர். அவர்களில் 1,065 பேர் தேர்வாகி உள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட குறைதீர்வுநாள் கூட்டத்தில் 829 மனுக்கள் பெறப்பட்டு அதில் 159 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்றுத்திறனாளிகள் 4 வகையான தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற அரசு புதிய ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆவின் பாலகம் நடத்தவும், ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யவும் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் இடம் தேர்வு செய்து, ஆவின் நிறுவனத்தில் அனுமதி பெற வேண்டும்.

மேலும் சிறுதொழில் தொடங்க மற்றும் பெட்டிக்கடை வைக்க கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்தியன் வங்கி மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் கடன் வழங்க இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று தொழில்தொடங்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment