FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, January 12, 2019

மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் நடத்த ரூ.25 ஆயிரம் மானியம் கலெக்டர் ராமன் தகவல்

10.01.2019, வேலூர்,
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்வுநாள் கூட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, சமூக பாதுகாப்புத்துறை தனித்துணை ஆட்சியர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் ராமன் தலைமை தாங்கி கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் ஒருவருக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு காதொலி கருவி ஆகியவற்றை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 5–ந் தேதி நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2,400 பேர் பங்கேற்றனர். அவர்களில் 1,065 பேர் தேர்வாகி உள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட குறைதீர்வுநாள் கூட்டத்தில் 829 மனுக்கள் பெறப்பட்டு அதில் 159 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்றுத்திறனாளிகள் 4 வகையான தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற அரசு புதிய ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆவின் பாலகம் நடத்தவும், ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யவும் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் இடம் தேர்வு செய்து, ஆவின் நிறுவனத்தில் அனுமதி பெற வேண்டும்.

மேலும் சிறுதொழில் தொடங்க மற்றும் பெட்டிக்கடை வைக்க கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்தியன் வங்கி மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் கடன் வழங்க இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று தொழில்தொடங்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment