FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 8, 2019

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பிரிவு தொடக்கம்


04.01.2019
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் மட்டுமே வேலை வாய்ப்புக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யபட்டு வந்தனர். கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய் பேசமுடியாத மனுதாரர்கள் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். சிறப்பு பிரிவு ராமநாதபுரத்தில் துவக்கப்பட்டிருப்பதால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்துகொள்ளலாம். அரசுத்துறைகளால் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பரிந்துரை செய்தல், தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பணியமர்த்தல் உள்ளிட்ட பணிகள் இப்பிரிவின் மூலம் செயல்படுத்தபட உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவிதொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment