FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, January 8, 2019

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பிரிவு தொடக்கம்


04.01.2019
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் மட்டுமே வேலை வாய்ப்புக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யபட்டு வந்தனர். கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய் பேசமுடியாத மனுதாரர்கள் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். சிறப்பு பிரிவு ராமநாதபுரத்தில் துவக்கப்பட்டிருப்பதால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்துகொள்ளலாம். அரசுத்துறைகளால் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பரிந்துரை செய்தல், தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பணியமர்த்தல் உள்ளிட்ட பணிகள் இப்பிரிவின் மூலம் செயல்படுத்தபட உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவிதொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment