FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, January 22, 2019

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு பதிவு: சென்னை செல்லாமல் தர்மபுரியில் பதியலாம்


தர்மபுரி: 'மாற்றுத்திறனாளிகள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவை இனி, சென்னைக்கு செல்லாமல், தர்மபுரியிலேயே பதிவு செய்யலாம்' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காதுகேளாதோர், கண் பார்வை தெரியாதவர், வாய்பேசாதோர் போன்ற மாற்றுத்திறனாளிகள் தாங்கள் கற்ற கல்வியை பதிவு செய்ய, சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். அங்கு செல்ல முடியாதவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று மனுக்கள், சான்றிதழ்களை ஒப்படைத்துவிடுவர். பின்னர் அவை சரிபார்க்கப்பட்டு சென்னை அனுப்பிவைத்து, அங்கிருந்து ஒப்புதல் பெறப்பட்டவும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நேரம், அலைச்சல் போன்றவற்றை கருத்தில்கொண்டு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவை துவங்கி அங்கேயே பதிவுகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட, 18 மாவட்டங்களில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவுகள் கடந்த வாரம் துவங்கப்பட்டது.

* தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கடகத்தூரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்கள் கல்வி சான்றிதழ்களை பதிவு செய்து பயன் பெறலாம். விவரங்களுக்கு, 04348-235006 என்ற எண்ணில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment