FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, January 22, 2019

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு பதிவு: சென்னை செல்லாமல் தர்மபுரியில் பதியலாம்


தர்மபுரி: 'மாற்றுத்திறனாளிகள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவை இனி, சென்னைக்கு செல்லாமல், தர்மபுரியிலேயே பதிவு செய்யலாம்' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காதுகேளாதோர், கண் பார்வை தெரியாதவர், வாய்பேசாதோர் போன்ற மாற்றுத்திறனாளிகள் தாங்கள் கற்ற கல்வியை பதிவு செய்ய, சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். அங்கு செல்ல முடியாதவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று மனுக்கள், சான்றிதழ்களை ஒப்படைத்துவிடுவர். பின்னர் அவை சரிபார்க்கப்பட்டு சென்னை அனுப்பிவைத்து, அங்கிருந்து ஒப்புதல் பெறப்பட்டவும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நேரம், அலைச்சல் போன்றவற்றை கருத்தில்கொண்டு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவை துவங்கி அங்கேயே பதிவுகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட, 18 மாவட்டங்களில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவுகள் கடந்த வாரம் துவங்கப்பட்டது.

* தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கடகத்தூரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்கள் கல்வி சான்றிதழ்களை பதிவு செய்து பயன் பெறலாம். விவரங்களுக்கு, 04348-235006 என்ற எண்ணில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment