FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 22, 2019

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு பதிவு: சென்னை செல்லாமல் தர்மபுரியில் பதியலாம்


தர்மபுரி: 'மாற்றுத்திறனாளிகள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவை இனி, சென்னைக்கு செல்லாமல், தர்மபுரியிலேயே பதிவு செய்யலாம்' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காதுகேளாதோர், கண் பார்வை தெரியாதவர், வாய்பேசாதோர் போன்ற மாற்றுத்திறனாளிகள் தாங்கள் கற்ற கல்வியை பதிவு செய்ய, சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். அங்கு செல்ல முடியாதவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று மனுக்கள், சான்றிதழ்களை ஒப்படைத்துவிடுவர். பின்னர் அவை சரிபார்க்கப்பட்டு சென்னை அனுப்பிவைத்து, அங்கிருந்து ஒப்புதல் பெறப்பட்டவும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நேரம், அலைச்சல் போன்றவற்றை கருத்தில்கொண்டு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவை துவங்கி அங்கேயே பதிவுகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட, 18 மாவட்டங்களில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவுகள் கடந்த வாரம் துவங்கப்பட்டது.

* தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கடகத்தூரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்கள் கல்வி சான்றிதழ்களை பதிவு செய்து பயன் பெறலாம். விவரங்களுக்கு, 04348-235006 என்ற எண்ணில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment