FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, January 22, 2019

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு பதிவு: சென்னை செல்லாமல் தர்மபுரியில் பதியலாம்


தர்மபுரி: 'மாற்றுத்திறனாளிகள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவை இனி, சென்னைக்கு செல்லாமல், தர்மபுரியிலேயே பதிவு செய்யலாம்' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காதுகேளாதோர், கண் பார்வை தெரியாதவர், வாய்பேசாதோர் போன்ற மாற்றுத்திறனாளிகள் தாங்கள் கற்ற கல்வியை பதிவு செய்ய, சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். அங்கு செல்ல முடியாதவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று மனுக்கள், சான்றிதழ்களை ஒப்படைத்துவிடுவர். பின்னர் அவை சரிபார்க்கப்பட்டு சென்னை அனுப்பிவைத்து, அங்கிருந்து ஒப்புதல் பெறப்பட்டவும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நேரம், அலைச்சல் போன்றவற்றை கருத்தில்கொண்டு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவை துவங்கி அங்கேயே பதிவுகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட, 18 மாவட்டங்களில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவுகள் கடந்த வாரம் துவங்கப்பட்டது.

* தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கடகத்தூரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்கள் கல்வி சான்றிதழ்களை பதிவு செய்து பயன் பெறலாம். விவரங்களுக்கு, 04348-235006 என்ற எண்ணில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment