FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, January 20, 2019

தையல் இயந்திரம் பெற மா.திறனாளிகளுக்கு தர்மபுரியில் அழைப்பு

19.01.2019
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வரும், 24ல், இதற்கான நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது. இதில், 18 வயது முதல், 45 வயதுள்ள, இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும், மிதமான அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும், 75 சதவீத பாதிப்புடைய நுண் அறிவுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. எனவே, 45 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்களது தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, தையல் பயிற்சி முடித்ததற்கான சான்று ஆகியவற்றை வரும், 24க்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கவுள்ள நேர்முக தேர்வில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment