FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, January 20, 2019

'காக்ளியர்' கருவி பொருத்தும் சிகிச்சை : தாலுகா மருத்துவமனைகளிலும் விரைவில் கிடைக்கும்


19.01.2019
''காது கேளாத குழந்தைகளுக்கான, 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளிலும், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது,'' என, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் பேசினார்.சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 'காக்ளியர்' சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கான, கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.இதில், சிகிச்சை பெற்ற, 250 குழந்தைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் பேசியதாவது:தமிழகத்தில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், காது கேட்காத, 3,000 குழந்தைகளுக்கு, 'காக்ளியர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வசதி, 17 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.இந்த சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு, சிகிச்சைக்கு பின், கேட்பியல், பேச்சு, மொழி, பயிற்சி அளிக்கும் வசதிகளை அதிகப்படுத்தும் வகையில், சென்னை மருத்துவ கல்லுாரியில், அதற்கான பிரத்யேக பி.ஏ.எஸ்.எல்.பி., பட்டப்படிப்பில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.இத்துறையில், பட்ட மேற்படிப்பும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும், செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.ராமச்சந்திரா மருத்துவமனையின், காது, மூக்கு, தொண்டை துறை பேராசிரியர், ரவிகுமார் பேசியதாவது:உலகளவில், மண்டை ஓட்டிற்குள், 'காக்ளியர்' கருவி போன்ற, மிக சிறிய கருவி பொருத்துவதற்கான ஆய்வு நடத்தப்படுகின்றன. ஆய்வுகள் வெற்றி அடையும் போது, அதன் தேவை அதிகமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment