FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, January 20, 2019

'காக்ளியர்' கருவி பொருத்தும் சிகிச்சை : தாலுகா மருத்துவமனைகளிலும் விரைவில் கிடைக்கும்


19.01.2019
''காது கேளாத குழந்தைகளுக்கான, 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளிலும், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது,'' என, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் பேசினார்.சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 'காக்ளியர்' சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கான, கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.இதில், சிகிச்சை பெற்ற, 250 குழந்தைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் பேசியதாவது:தமிழகத்தில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், காது கேட்காத, 3,000 குழந்தைகளுக்கு, 'காக்ளியர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வசதி, 17 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.இந்த சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு, சிகிச்சைக்கு பின், கேட்பியல், பேச்சு, மொழி, பயிற்சி அளிக்கும் வசதிகளை அதிகப்படுத்தும் வகையில், சென்னை மருத்துவ கல்லுாரியில், அதற்கான பிரத்யேக பி.ஏ.எஸ்.எல்.பி., பட்டப்படிப்பில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.இத்துறையில், பட்ட மேற்படிப்பும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும், செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.ராமச்சந்திரா மருத்துவமனையின், காது, மூக்கு, தொண்டை துறை பேராசிரியர், ரவிகுமார் பேசியதாவது:உலகளவில், மண்டை ஓட்டிற்குள், 'காக்ளியர்' கருவி போன்ற, மிக சிறிய கருவி பொருத்துவதற்கான ஆய்வு நடத்தப்படுகின்றன. ஆய்வுகள் வெற்றி அடையும் போது, அதன் தேவை அதிகமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment