FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, January 20, 2019

'காக்ளியர்' கருவி பொருத்தும் சிகிச்சை : தாலுகா மருத்துவமனைகளிலும் விரைவில் கிடைக்கும்


19.01.2019
''காது கேளாத குழந்தைகளுக்கான, 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளிலும், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது,'' என, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் பேசினார்.சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 'காக்ளியர்' சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கான, கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.இதில், சிகிச்சை பெற்ற, 250 குழந்தைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் பேசியதாவது:தமிழகத்தில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், காது கேட்காத, 3,000 குழந்தைகளுக்கு, 'காக்ளியர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வசதி, 17 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.இந்த சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு, சிகிச்சைக்கு பின், கேட்பியல், பேச்சு, மொழி, பயிற்சி அளிக்கும் வசதிகளை அதிகப்படுத்தும் வகையில், சென்னை மருத்துவ கல்லுாரியில், அதற்கான பிரத்யேக பி.ஏ.எஸ்.எல்.பி., பட்டப்படிப்பில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.இத்துறையில், பட்ட மேற்படிப்பும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும், செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.ராமச்சந்திரா மருத்துவமனையின், காது, மூக்கு, தொண்டை துறை பேராசிரியர், ரவிகுமார் பேசியதாவது:உலகளவில், மண்டை ஓட்டிற்குள், 'காக்ளியர்' கருவி போன்ற, மிக சிறிய கருவி பொருத்துவதற்கான ஆய்வு நடத்தப்படுகின்றன. ஆய்வுகள் வெற்றி அடையும் போது, அதன் தேவை அதிகமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment