FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, January 20, 2019

'காக்ளியர்' கருவி பொருத்தும் சிகிச்சை : தாலுகா மருத்துவமனைகளிலும் விரைவில் கிடைக்கும்


19.01.2019
''காது கேளாத குழந்தைகளுக்கான, 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளிலும், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது,'' என, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் பேசினார்.சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 'காக்ளியர்' சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கான, கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.இதில், சிகிச்சை பெற்ற, 250 குழந்தைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் பேசியதாவது:தமிழகத்தில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், காது கேட்காத, 3,000 குழந்தைகளுக்கு, 'காக்ளியர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வசதி, 17 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.இந்த சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு, சிகிச்சைக்கு பின், கேட்பியல், பேச்சு, மொழி, பயிற்சி அளிக்கும் வசதிகளை அதிகப்படுத்தும் வகையில், சென்னை மருத்துவ கல்லுாரியில், அதற்கான பிரத்யேக பி.ஏ.எஸ்.எல்.பி., பட்டப்படிப்பில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.இத்துறையில், பட்ட மேற்படிப்பும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும், செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.ராமச்சந்திரா மருத்துவமனையின், காது, மூக்கு, தொண்டை துறை பேராசிரியர், ரவிகுமார் பேசியதாவது:உலகளவில், மண்டை ஓட்டிற்குள், 'காக்ளியர்' கருவி போன்ற, மிக சிறிய கருவி பொருத்துவதற்கான ஆய்வு நடத்தப்படுகின்றன. ஆய்வுகள் வெற்றி அடையும் போது, அதன் தேவை அதிகமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment