FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, January 11, 2019

காது கேளாத வாய் பேசாத சிறுவனை மீட்ட போலீசார்

 07.01.2019, காரியாபட்டி:
காரியாபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் தனியாக நடந்து வந்த சிறுவனை ரோந்து போலீசார் பிடித்து ஆவியூர் போலீசில் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாமல் இருந்ததால் விசாரிப்பதில் சிக்கல் இருந்தது. கை விரல் ரேகை கொண்டு ஆதாரில் உள்ள முகவரியை கண்டறிய போலீசார் முயற்சி செய்து முடியவில்லை. வாகனத்தில் ஏற்றிச் சென்று சைகை மூலம் வீட்டு முகவரியை கண்டறிந்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த மதியழகன் மகன் மணிமுருகன் என்பதும், தந்தை திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது. இதன்பின் ஆவியூர் எஸ்.ஐ.,கள் மகேஷ்வரன், பிச்சைபாண்டி, கலைச்செல்வன் மற்றும் போலீசார் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment