FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, November 26, 2025

உலக மாற்றுத்திறனாளி தினம்... 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஓவியப்போட்டி !




25.11.2025 
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் ஓவிய போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சமூகத்தில் அவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க விளையாட்டுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் பிற சிறப்புப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு சார்பில், தடகளம், செஸ், கைப்பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதன்படி, வருகிற டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் , சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப்பள்ளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பயின்று வரும் செவித்திறன் குறைபாடுடையோர் (Hearing Imparied), இயக்கத்திறன் குறைபாடுடையோர் (Locomotor Disability), அறிவுசார் குறைபாடுடையோர் (Intellectual Disability). பார்வைத்திறன் குறைபாடுடையோர் (Visually Impaired) ஆகிய மாணவ/மாணவியர்களுக்கு ஓவியப்போட்டிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் சிறப்பு குழந்தைகள் பங்கு பெற்று தங்களின் ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு முதல் இடத்திற்கு ரூ.1,000 மும், 2 ஆம் இடத்திற்கு ரூ.500 ம். 3 ஆம் இடத்திற்கு ரூ.250 ம் பரிசுத்தொகை உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படும். மேலும், இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் ஓவியங்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment