FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, November 26, 2025

உலக மாற்றுத்திறனாளி தினம்... 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஓவியப்போட்டி !




25.11.2025 
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் ஓவிய போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சமூகத்தில் அவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க விளையாட்டுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் பிற சிறப்புப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு சார்பில், தடகளம், செஸ், கைப்பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதன்படி, வருகிற டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் , சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப்பள்ளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பயின்று வரும் செவித்திறன் குறைபாடுடையோர் (Hearing Imparied), இயக்கத்திறன் குறைபாடுடையோர் (Locomotor Disability), அறிவுசார் குறைபாடுடையோர் (Intellectual Disability). பார்வைத்திறன் குறைபாடுடையோர் (Visually Impaired) ஆகிய மாணவ/மாணவியர்களுக்கு ஓவியப்போட்டிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் சிறப்பு குழந்தைகள் பங்கு பெற்று தங்களின் ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு முதல் இடத்திற்கு ரூ.1,000 மும், 2 ஆம் இடத்திற்கு ரூ.500 ம். 3 ஆம் இடத்திற்கு ரூ.250 ம் பரிசுத்தொகை உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படும். மேலும், இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் ஓவியங்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment