FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, November 26, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்விக்க சிறப்பு ஏற்பாடுகள்...!




26.11.2025
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்பயணம், மெட்ரோ ரயில் பயணம் மற்றும் திரையரங்கில் திரைப்படம் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் உற்சாகமடைந்தனர்.

வரும் டிசம்பர் 3, 2025 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளையும் மற்றும் அவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று (25.11.2025) அவர்கள் விமான பயணம், மெட்ரோ ரயில் பயணம் செய்யவும் திரைப்படங்களை பார்க்கவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் உடனாளர்களுடன் திருச்சியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலர் மதுமதி, மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் லஷ்மி, இணை இயக்குநர் ஃபெர்மி வித்யா ஆகியோர் உடனிருந்தனர்.



No comments:

Post a Comment