FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, November 26, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்விக்க சிறப்பு ஏற்பாடுகள்...!




26.11.2025
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்பயணம், மெட்ரோ ரயில் பயணம் மற்றும் திரையரங்கில் திரைப்படம் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் உற்சாகமடைந்தனர்.

வரும் டிசம்பர் 3, 2025 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளையும் மற்றும் அவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று (25.11.2025) அவர்கள் விமான பயணம், மெட்ரோ ரயில் பயணம் செய்யவும் திரைப்படங்களை பார்க்கவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் உடனாளர்களுடன் திருச்சியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலர் மதுமதி, மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் லஷ்மி, இணை இயக்குநர் ஃபெர்மி வித்யா ஆகியோர் உடனிருந்தனர்.



No comments:

Post a Comment