FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, November 21, 2025

செவித்திறன் பாதித்த மாணவர்களுக்கு சைகை மொழி காணொலி ஒளிபரப்பு



20.11.2025
மோகனுார், அரசு பள்ளிகளில் பயிலும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் கற்பிப்பதற்காக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம், மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சைகை மொழி காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. தலைமையாசிரியர் நீதிராஜா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார்.

இதில், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சைகை முறையின் அவசியத்தை தெரிந்து கொண்டனர். கல்வி தொலைக்காட்சி மூலம், காலை, 11:00 மற்றும், மாலை, 5:00 மணிக்கு, சைகை மொழி பயிற்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில், ஆங்கில எழுத்துக்கள், எண்கள், வாரத்தின் நாட்கள், நிறங்கள், வாழ்த்துக்கள், மாதங்கள், உணவு பொருட்கள், குடும்ப உறுப்பினர்கள், நடத்தை செயல்பாடுகள், வெளிப்பாடுகள் போன்ற பாடங்கள், மாணவர்களுக்கு நேரடியாக காண்பிக்கப்பட்டு, அதற்குரிய விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சி, மோகனுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி மூலம், மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, வட்டார ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, சிறப்பு பயிற்றுனர்கள் ஆனந்தகுமார், மீனா, உமாதேவி, செல்வராணி, செந்தமிழ்செல்வி, வனிதா, இயன்முறை மருத்துவர் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.


No comments:

Post a Comment