FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, November 26, 2025

விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்...! இன்டிகோ நிறுவனத்தின் முயற்சிக்கு நெட்டிசன்கள் பாராட்டு...



25.11.2025
இண்டிகோ பயணி ஒருவர் சமீபத்தில் தன்னை ஊக்குவிக்கும் விதமான, முற்றிலும் வித்தியாசமான ஒரு நிகழ்வைக் கண்டதாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.

விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி நபரை ஊழியராகப் பணி அமர்த்தி உள்ள இண்டிகோ நிறுவனத்தைப் பாராட்டி விமான பயணி ஒருவர் சோஷியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தப் பதிவிற்கு இண்டிகோ நிறுவனமும் பதில் அளித்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக விமான நிலையங்கள் என்றாலே அதிக கூட்டம் நிறைந்ததாகவும், அழுத்தமான சூழ்நிலை கொண்டதாகவும் இருக்கக்கூடும். ஆனால், இண்டிகோ பயணி ஒருவர் சமீபத்தில் தன்னை ஊக்குவிக்கும் விதமான, முற்றிலும் வித்தியாசமான ஒரு நிகழ்வைக் கண்டதாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.

வழக்கமான செக்-இன் செய்வதற்காகச் சென்ற அவர், அங்கு பணிபுரிந்த ஊழியர் காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார். அந்த ஊழியர் பயணிகளை மிகவும் அமைதியான முறையில், பொறுமையாக வழிநடத்தி வந்ததாகத் தெரிவித்தார். இது பயணிகள் இடையே ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், ஊனமுற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதை அடுத்து விமான நிறுவனத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். இப்படி ஒரு அற்புதமான முயற்சி எடுத்த விமான நிறுவனம் மற்றும் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிகவும் எளிமையாகவும், மரியாதையோடும் செய்யும் ஊழியர் ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் தன்னுடைய வீடியோவில் ஷேர் செய்துள்ளார். பின்னர் தன்னுடைய மொத்த அனுபவத்தையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு, தன்னுடைய உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றார்.

 

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இண்டிகோ நிறுவனமும் பயணியின் இந்தப் பதிவுக்கு பதில் அளித்துள்ளது. இந்தப் பாராட்டை கண்டு மிகவும் மகிழ்வதாகவும், தங்கள் ஊழியர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாகவும், சமமாகவும் நடந்து கொள்வதாகவும் விமான நிலைய நிறுவனம் தெரிவித்தது. ஊழியர்களின் உழைப்பை அங்கீகரித்ததற்கும், அனைத்துத் திறமையாளர்களையும் ஊக்குவிப்பதில் தங்கள் நிறுவனத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்ததற்கும் அவர்கள் அந்தப் பயணியை நன்றியுடன் பாராட்டினர்.


No comments:

Post a Comment