FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, November 26, 2025

மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை



25.11.2025
திட்டக்குடி: திட்டக்குடியில் நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், காலியாக உள்ள சேர்மன் பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சியில் பதவி பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

தற்போது, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான (40 சதவீதம் மாற்றுத்திறன் கொண்டவர்) மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பித்தனர்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சியில் 6 மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்தனர்.

இவர்களின் விண்ணப்பத்தை நகராட்சி நிர்வாகம் கலெக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய அனுப்பப்பட்டது.

அதில், ஒரு மாற்றுத்திறனாளி தேர்வு செய்து, அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு நியமன ஆணை வந்துள்ளது. இன்று அவருக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கான ஆணை வழங்க உள்ளது.

இதையறிந்த தி.மு.க., உட்பட, 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் நேற்று பகல் 12:00 மணியளவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்றும், காலியாக உள்ள சேர்மன் பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் முரளிதரன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதில், நியமன கவுன்சிலர் பதவிக்கு 6 மாற்றுத்திறன் கொண்டவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பம் கலெக்டருக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைத்தோம். அவர் பரிந்துரை செய்தவர்களுக்கு தான் நியமன ஆணை வழங்க முடியும்' என்றார். அதையேற்று பகல் 2:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



No comments:

Post a Comment