FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, November 26, 2025

மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை



25.11.2025
திட்டக்குடி: திட்டக்குடியில் நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், காலியாக உள்ள சேர்மன் பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சியில் பதவி பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

தற்போது, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான (40 சதவீதம் மாற்றுத்திறன் கொண்டவர்) மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பித்தனர்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சியில் 6 மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்தனர்.

இவர்களின் விண்ணப்பத்தை நகராட்சி நிர்வாகம் கலெக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய அனுப்பப்பட்டது.

அதில், ஒரு மாற்றுத்திறனாளி தேர்வு செய்து, அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு நியமன ஆணை வந்துள்ளது. இன்று அவருக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கான ஆணை வழங்க உள்ளது.

இதையறிந்த தி.மு.க., உட்பட, 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் நேற்று பகல் 12:00 மணியளவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்றும், காலியாக உள்ள சேர்மன் பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் முரளிதரன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதில், நியமன கவுன்சிலர் பதவிக்கு 6 மாற்றுத்திறன் கொண்டவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பம் கலெக்டருக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைத்தோம். அவர் பரிந்துரை செய்தவர்களுக்கு தான் நியமன ஆணை வழங்க முடியும்' என்றார். அதையேற்று பகல் 2:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



No comments:

Post a Comment