FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, January 21, 2026

கல்வியில் புரட்சி: மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி இனி இலவசம்!


20.01.2026 கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள பொது உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி (OKU) மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்குதடையின்றி கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான கல்வி முற்றிலும் இலவசம் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) இன்று நடைபெற்ற “தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2026-2035” அறிமுக விழாவில் பிரதமர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

பொதுப் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் (Polytechnics) மற்றும் சமூகக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 3,000 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முழு கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ள 5,800 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த இலவசக் கல்வித் திட்டம், தற்போது விரிவுபடுத்தப்பட்டு 10,000 ஏழை மாணவர்களுக்கு பிடிபிடிஎன் (PTPTN) மூலம் உதவி வழங்கப்படவுள்ளது.

மேலும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் அறைகளை மேம்படுத்தவும் புனரமைக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டங்களை அறிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அவற்றைச் சரியாகச் செயல்படுத்துவதே முக்கியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

“இது வெறும் நினைவூட்டல் அல்ல, இது எனது கடுமையான எச்சரிக்கை. மார்ச் மாதம் முதல் இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மாதாந்தர அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். காகிதத்தில் மட்டும் உலகத் தரம் வாய்ந்த திட்டமாக இல்லாமல், மாணவர்களுக்கு அதன் பலன் நேரடியாகச் சென்றடைய வேண்டும்,” என்று அவர் சாடினார்.

இதே விழாவில் பேசிய பிரதமர், இந்த ஆண்டு முதல் அனைத்துப் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மலேசிய அரசியலமைப்பு (Federal Constitution) மற்றும் தேசிய வரலாறு (Malaysian History) ஆகிய பாடங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும், இவை முழுமையாக மலாய் மொழியிலேயே கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த அதிரடி அறிவிப்புகள் மலேசியக் கல்வித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது, குறிப்பாகச் சமூகத்தின் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு இது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.




உள்ளாட்சி அமைப்பில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெற சட்டத் திருத்தம்



20.01.2026
சென்னை: சட்டப் பேரவையில் ஆளுநர் உரையின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தொடக்க நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை மற்றும் திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் , அறிவுசார் குறைபாடு உடையவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினராக்க இந்த அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 3631 மாற்றுத் திறனாளிகள் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாகியுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை இந்த அரசு ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 5.88 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர பராமரிப்பு தொகை தற்போது ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.58 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.



Tuesday, January 20, 2026

பேச முடியாத மாற்றுத் திறனாளி தவறி விழுந்து உயிரிழப்பு


20.01.2026
கோவை: கோவையில் பேச முடியாத மாற்றுத் திறனாளி நள்ளிரவில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லம்பாளையம் கணபதியப்பன் கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (49). இவரது மனைவி சுமதி. இவா்கள் இருவரும் காது மற்றும் வாய்ப்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இந்தத் தம்பதி வேலை பாா்த்து வந்தனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த ரங்கநாதன் அந்தப் பகுதியில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.



மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் இருக்கை ஒதுக்கீடு குறித்து ஆய்வு: ஐகோர்ட் உத்தரவு


19.01.2026
சென்னை: மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு, முறையாக அமல்படுத்தப்படுகிறதா என திடீர் சோதனைகள் நடத்த, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி, வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மெட்ரோ ரயில் தரப்பில், ஒவ்வொரு பெட்டியிலும் மொத்தமுள்ள 50 இருக்கைகளில் 14 இருக்கைகள் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கைகளின் அருகில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என எழுதி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், தனியாக இருக்கைகள் ஒதுக்கியிருந்தாலும், அந்த இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் எவரும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வந்தால் எழுந்து இடம் வழங்குவதில்லை. அதனால், பெண்களுக்கு என தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல, மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி பெட்டி ஒதுக்கீடு செய்வது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால், மனுதாரரின் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என அவ்வப்போதைக்கு திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் எனவும், இருக்கைகள் ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாட்களில் வகுக்க வேண்டும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு விட்டுத்தர மறுக்கும்பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு




19.01.2026
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி கே.மணிவண்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனா்.

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியும் அவை மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக கிடைக்கவில்லை.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பினேன். அதற்கு தோ்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், தொகுதி மறுவரையறை சட்டத்தில் வழிவகை இல்லை என பதிலளித்துள்ளது. எனவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.


Saturday, January 17, 2026

பணி நிரந்தரம் செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்



16.01.2026 
சென்னை: பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத்திறனாளி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜலீல் முகைதீன் தலைமை வகித்தார். போராட்டத்தில், குடும்பத்துடன் பங்கேற்ற மாற்றத்திறனாளிகள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.போராட்டம் குறித்து, ஜலீன் முகைதீன் கூறியதாவது:

அரசு துறையில் தற் காலிகமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, பணி நிரந்தரம் செய்யும் வகையில், கடந்த 2008ல் அரசாணை எண் 151ஐ அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, அரசு துறையில் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய முறையில், இரண்டு ஆண்டுகள் பணி செய்த, 1,077 பேர் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த நவம்பரில், அரசு துறைக ளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டி தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் வகையில், அரசாணை 24ஐ வெளியிட்டு, அதிகாரி கள் பழைய அரசாணை 151ஐ ரத்து செய்துள்ளனர்.

இதனால், கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் வேண்டி காத்திருக்கும் நாங்கள், மி குந்த மன வேதனையில் உள்ளோம்.

எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த அரசாணை 151ஐ மீண்டும் செயல்படுத்தி, அதன்படி நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இதை அதிகாரிகள் செயல்படுத்தும் வரை, காத்திருப்பு போராட்டத்தை மேற்கொள்ளுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


மாற்றுதிறனாளிகள் இலவச பஸ் பாஸ் வேண்டுமா? சிறப்பு முகாம்கள் தொடக்கம்...விண்ணப்பிப்பது எப்படி?


தமிழ்நாடு முழுவதும் மாற்றுதிறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

16.01.2026 
வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற 31.01.2026 வரை சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பயண அட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தில் வசிக்கும், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற ஏதுவாக, சிறப்பு முகாம் மூலம் ஆன்லைனில் பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறப்பு முகாம்கள் வரும் ஜனவரி 31-ம்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் (அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து) சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நடக்கிறது. இந்த கார்டை பெற இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள (பின்புறம் இ-சேவை அருகில்) வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அந்தந்த மாவட்ட நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

தென் சென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலை நாட்களில் மட்டும் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்களுக்கு சென்று விண்ணப்பித்து இலவச பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள், தகுதிகள் :

இதனை விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, யுடிஐடிஅட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மருத்துவ சான்று, கல்வி பயில்வதற்கான சான்று, பணியிடச் சான்று ஆகியவற்றை நேரில் எடுத்து வர வேண்டும்.

தனியார் நிறுவனப் பணியாளர்கள், மாணவர்கள், சிறப்புப் பள்ளி மாணவர்கள், பயண வரம்புகள் மற்றும் பிரிவுகள், பார்வைக் குறைபாடுடையோர், கை, கால் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச இயலாதவர்கள், சிகிச்சை மற்றும் பயிற்சி எடுக்கும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.



அரசு மருத்துவமனை இ.என்.டி, பிரிவில் காது கேட்கும் கருவி வழங்கல்



16.01.2026 
புதுச்சேரி: மத்திய அரசின் ராஷ்டிரிய வயோ யோஜனா திட்டத்தின் சார்பில், 43 பேருக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டைப் பிரிவு ஏற்பாட்டின் மூலம் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராஷ்டிரிய வயோ யோஜனா மூலம் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகள் 43 பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், குறை தீர்வு அதிகாரி ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவ அதிகாரி ஸ்டாலின் சிவகுருநாதன் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி அரசின் சுகாதார துறை கீழ் இயங்கும், தேசிய சுகாதார இயக்கம் காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், இதுவரை 150 பயனாளிகளுக்கு அதிநவீன காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிகப்பு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் காது கருவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது என, புதுச்சேரி மாநில திட்ட அலுவலர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் திட்டம், செயற்கை உறுப்பு மற்றும் எலும்பு மூட்டு ஆதரவு சாதனங்கள் தென்னிந்திய அலுவலர் கிரிதரி நாயக் குழுவினர் மூலம் உபகரணங்கள் பொருத்தப்பட்டது.



வாய் பேசாத, காது கேட்காத ஊழியர் மீது ரசாயன நீரைத் தெளித்ததாக மேற்பார்வையாளர் மீது குற்றச்சாட்டு



சிங்கப்பூர்:
துப்புரவு ஊழியர் ஒருவர் மீது ரசாயனம் கலந்த நீரைத் தெளித்ததாக அவரது மேற்பார்வையாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
சம்பவத்தால் அந்த ஊழியரின் பார்வை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஏற்கனவே அவருக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது.

மேற்பார்வையாளரான 36 வயது பிரியா ராமசந்திரன் மீது வேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

சம்பவம் 2024ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி Dulwich College வளாகத்தில் நடந்ததாகக் கூறப்பட்டது.

மின்தூக்கியில் பிரியா அந்தப் பெண் மீது ரசாயன நீரைத் தெளித்ததாக இன்னோர் ஊழியர் நீதிமன்றத்தில் கூறினார்.

அன்றைய தினம் இருவருக்கும் இடையில் சண்டை எதுவும் நடந்ததா என்பது தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வேறு இரு தருணங்களில் பிரியா பாதிக்கப்பட்டவரின் தோளையும் கழுத்தையும் இறுக்கிப் பிடித்துக் காயம் ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.

நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை, அதிகபட்சம் 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



சைகை மொழி பதிவில் குறைபாடு: மாற்றுத் திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு ரத்து - ஐகோர்ட் உத்தரவு

Chennai High Court: பாதிக்கப்பட்ட பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், அவரது பிறப்புறுப்புகளில் சமீபத்திய காயங்கள் ஏதும் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Photograph: (AI Generated Image)

14.01.2026
Deaf mute survivor case: 2018-ம் ஆண்டு 20 வயதுடைய காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம். நிர்மல் குமார் விசாரித்தார்.

Chennai High Court Latest Judgment: காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் 'ஏமாற்றுதல்' என்று மாற்றியமைத்தது. பெண்ணின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த மொழிபெயர்ப்பாளர், அவர் செய்த குறிப்பிட்ட சைகைகள் மற்றும் அடையாளங்களை விவரிக்கத் தவறியதுடன், மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சத்தியப்பிரமாணம் செய்து வைப்பது உள்ளிட்ட கட்டாய நடைமுறைப் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் கவனித்தது.

2018-ம் ஆண்டு 20 வயதுடைய காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார். அவர் பாலியல் வன்கொடுமை குற்றத்தை 'ஏமாற்றுதல்' என்ற குற்றமாக மாற்றியதோடு தண்டனையையும் குறைத்தார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்கள் எதிலும், அவர் செய்த சைகைகள் மற்றும் அடையாளங்கள் குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இது ஒரு முக்கியமான காரணியாகும்” என்று ஜனவரி 12-ம் தேதியிட்ட உத்தரவு அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு எத்தகைய தண்டனையும் வழங்க முடியாது என்றும் சேர்த்துக் கூறியது.

மேல்முறையீட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதி செய்யத்தக்கதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. மேல்முறையீட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதி செய்யத்தக்கதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. Photograph: (AI Generated Image)

கண்டறிதல்கள்(Findings)

மேல்முறையீட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதி செய்யத்தக்கதல்ல.

மேல்முறையீட்டாளருக்கு பாலியல் வன்கொடுமைக்காக விதிக்கப்பட்ட தண்டனை 'ஏமாற்றுதல்' என மாற்றப்பட்டு, தண்டனையானது அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. மேலும், அந்தப் பெண்ணிற்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், அவரது பிறப்புறுப்புகளில் சமீபத்திய காயங்கள் ஏதும் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறியவில்லை.

இந்த வழக்கில், நிகழ்வுகளின் சங்கிலித்தொடர் முழுமையாகவும் சீராகவும் இல்லை.

சூழல்களை வைத்துப் பார்க்கும்போது, அங்கு எந்தப் பலப்பிரயோகமும் (பலாத்காரம்) நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது குறித்த ஆலோசனையை மேல்முறையீட்டாளர் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஏதோ ஒரு தொடர்பு அல்லது அடிப்படை இல்லாமல் ஒரு நாளில் நடந்த விஷயமாக இருக்க முடியாது.

புகார் மனுவை எழுதிய நபர் விசாரிக்கப்படவில்லை.

தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதை அந்தப் பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாய் பேச முடியாத சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கையாளும் போது, சாட்சியச் சட்டத்தின் பிரிவு 119-ஐப் பின்பற்றுவது விருப்பத்திற்குரியது அல்ல, அது கட்டாயமானது.

மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது சிறப்புப் பயிற்றுநர்கள் பயன்படுத்தப்படும்போது வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 119-ன் விதிமுறை வலியுறுத்துகிறது.

இந்த வழக்கில், வீடியோ பதிவு எதுவும் செய்யப்படவில்லை.

எனவே, வாய் பேச இயலாத நபரின் சாட்சியத்தைக் கருத்தில் கொள்வதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் முன்னதாகப் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் இங்கு பின்பற்றப்படவில்லை.

இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுக்கும், சட்டப்படி வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு முன்பாகச் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சம்பவம் நவம்பர் 18, 2015-ல் நடந்ததா அல்லது நவம்பர் 27, 2015-ல் நடந்ததா என்ற முரண்பாட்டை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இது வழக்கின் ஆரம்பத்தையே சந்தேகத்திற்குரியதாக மாற்றுகிறது.

திருமணம் குறித்த ஆலோசனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டது உள்ளிட்ட சுற்றியுள்ள சூழல்கள், பலப்பிரயோகம் செய்யப்பட்டதற்கான காரணி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு இட்டுச் சென்றது.

குற்றச்சாட்டுகள்

நவம்பர் 18, 2015-ல், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 20 வயதுடைய காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பெங்களூருவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பிறகு, நவம்பர் 28, 2015-ல் தான் இந்தப் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஆரம்பத்தில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) கீழ் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு டிசம்பர் 11, 2018-ல் விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தண்டனையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

வாதங்கள்

எதிர்தரப்பு


மேல்முறையீட்டாளருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. சீனிவாசன், அரசுத் தரப்பு வழக்கு முழுவதும் அந்தப் பெண்ணின் சாட்சியத்தை மட்டுமே நம்பியுள்ளது என்றும், வாய் பேச முடியாதவர்களின் சாட்சியங்களைக் கையாளும் இந்தியச் சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 119-ல் ஏற்பட்டுள்ள பெரும் விதிமீறல்களால் இது சட்டப்படி நம்பகத்தன்மையற்றது என்றும் வாதிட்டார்.

இந்தியச் சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 119, "வாய் பேச இயலாதவர்களின் சாட்சிகள்" (dumb witness) அளிக்கும் சாட்சியங்களைக் கையாள்கிறது.

இது போன்ற சாட்சிகள் திறந்த நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ சாட்சியம் அளிக்க அனுமதிக்கிறது. இது வாய்மொழிச் சாட்சியமாகவே கருதப்படும். பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நீதிமன்றங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் வீடியோ பதிவுகளைப் பயன்படுத்தும்.

போலீஸ் விசாரணை, பிரிவு 164-ன் கீழ் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் விசாரணையின் போது எனப் பல கட்டங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அவர்களில் யாருக்கும் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை என்று சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், அந்த வாக்குமூலங்கள் வீடியோ பதிவு செய்யப்படவில்லை, பாதிக்கப்பட்ட பெண் பயன்படுத்திய சைகைகள் மற்றும் அடையாளங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்படவில்லை.

சம்பவம் நடந்த தேதி குறித்து அரசுத் தரப்பு வழக்கில் உள்ள முரண்பாடுகளையும் எதிர்தரப்பு சுட்டிக்காட்டியது. பாதிக்கப்பட்ட பெண் ஒரு தெளிவான தேதியைக் குறிப்பிடவில்லை என்றும், அவரது தாய் அந்தத் தகவல் நவம்பர் 18 அல்லது நவம்பர் 27 அன்று தெரியவந்ததாக முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ளார் என்றும் வாதிடப்பட்டது.

கூடுதலாக, ரத்தக்கசிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், மருத்துவ அறிக்கையில் அத்தகைய காயங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பு

கூடுதல் அரசுத் தரப்பு வழக்கறிஞர் லியோனார்ட் அருள் ஜோசப் செல்வம், பெண்ணின் சாட்சியம் நிலையானதாக இருப்பதாகவும், உடலுறவு நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் அதை உறுதிப்படுத்துவதாகவும் வாதிட்டார்.

புகார் அளிக்க ஏற்பட்ட தாமதம் இயற்கையானது என்றும், தாய் ஊரில் இல்லாததால் அது சரியான முறையில் விளக்கப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.

மேலும், சாட்சியச் சட்டம் என்பது நடைமுறை சார்ந்தது என்றும், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட எளிய நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சிறு நடைமுறைத் தவறுகள் நீதியைத் தடுத்துவிடக் கூடாது என்றும் சமர்ப்பிக்கப்பட்டது.


Friday, January 16, 2026

செவித்திறன் குறைபாடு உடையோர் பள்ளியில் விளையாட்டு பூங்கா திறப்பு



13.01.2026
சேலம்: சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்-பட்ட விளையாட்டு பூங்காவை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: இப்பள்ளி, விடுதி கட்டடங்-களை, 2024 ஜன., 18ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6.70 கோடி ரூபாய் மதிப்பில், 100 மாணவ, மாண-வியர் தங்கி படிக்கும்படி, பள்ளி கட்டடம் கட்டப்பட்டு பயன்-பாட்டில் உள்ளது. இங்கு குமரன் அப்புசாமி நினைவு விளை-யாட்டு பூங்கா, தற்போது திறக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் விளையாடும்படி, பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு, செஸ், கேரம் போர்டு, டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்-சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

IDCA inaugurates 3rd T10 Women's Deaf Premier League 2026 in Mumbai


14.01.2026
New Delhi [India], January 14 (ANI): The third edition of the IDCA T10 Women's Deaf Premier League 2026 kicked off at Matunga Gymkhana, Mumbai, with a grand opening ceremony. The tournament was inaugurated by the Chief Guest, Padmashri Diana Edulji, former Indian cricketer and Arjuna Awardee, marking a significant milestone for the league with the presence of one of India's most celebrated pioneers of women's cricket.

Building on the success of its previous two editions, the tournament will bring together some of the finest hearing-impaired women cricketers from across the country. The league aims to further strengthen the platform for women's deaf cricket in India while promoting inclusion, equality, and sporting excellence at the national level, according to an IDCA release.

Speaking about the tournament, Sumit Jain, President, IDCA, said, "Building on the remarkable success of the earlier editions, the third edition of the T10 Women's Deaf Premier League reflects our continued commitment to promoting cricket among hearing-impaired women athletes. We are deeply honoured to have Padma Shri Diana Edulji as our Chief Guest. Her presence is inspirational and reinforces the importance of inclusivity and equal opportunity in Indian sport. This tournament continues to break barriers and create meaningful opportunities for deaf women cricketers across the country."

Addressing the gathering, the Chief Guest, Diana Edulji, said, "It gives me immense pleasure to be part of the opening ceremony of the IDCA T10 Women's Deaf Premier League organised by the Indian Deaf Cricket Association. Sport has the power to transcend limitations, and this league is a wonderful example of how talent, determination, and passion take centre stage. I commend IDCA for their dedication towards empowering hearing-impaired women through cricket and wish all the teams a successful tournament."

Dedicated to nurturing upcoming sports talent among specially-abled athletes, the IDCA T10 Women's Deaf Premier League 2026 continues to receive strong support from corporate and institutional partners, reflecting the growing commitment of India's corporate sector towards promoting inclusive sports and creating equal opportunities for persons with disabilities.

The opening ceremony was attended by a distinguished line-up of Guests of Honour, including Mahendra Ved; Mahiyar Dastoor, Hon. General Secretary, Matunga Gymkhana; Prof. Swati Lodha, Director, MET Institute of Management; Rajika Mittra-Co-Founder, Asian Art House; representatives from Nykaa, including Pratik Trivedi, Head - CSR, Nykaa; Padma Shri Mukesh Batra, Founder & Chairman Emeritus, Batra Healthcare; Manoj Gursahani, Executive Director, Mumbai Chapter, Global Forum; and Lulu Raghavan, President - APAC, Landor, Shalini Gupta, Founder & CEO, Secret Sauce Communications.

Roma Balwani, CEO, IDCA, commented, "The third edition of the T10 Women's Deaf Premier League stands as a testament to the resilience and determination of India's deaf women cricketers. With five strong teams and outstanding talent on display, we look forward to an exciting tournament that will continue to elevate the standard of women's deaf cricket in India. The journey and dedication of these athletes remain a source of inspiration for us all."

"The tournament will celebrate outstanding performances with cash prizes and individual awards, recognising excellence across multiple categories and encouraging continued growth and competitiveness among players. We are greatly indebted to our support partners who have stood with us for the common cause of upliftment of hearing-impaired women cricket players. We are excited to announce the first-ever tournament of IDCA women's deaf cricket team will play against Sri Lanka from 7th to 14th July 2026," she added.

The on-field action commenced with the opening match between Punjab Lions and Mumbai Stars, where Punjab Lions won the toss and elected to bat first. The second match to follow will be Bangalore Badshahs to take on U.P. Warriorz, with U.P. Warriorz winning the toss and opting to bowl first. The third match of the day will feature Mumbai Stars against Delhi Bulls, with Delhi Bulls winning the toss and choosing to bowl first.

The tournament features five powerhouse teams led by exceptional talent:

* Punjab Lions

* Mumbai Stars

* Delhi Bulls

* Bangalore Badshahs

* U.P. Warriorz. (ANI)

(This content is sourced from a syndicated feed and is published as received. The Tribune assumes no responsibility or liability for its accuracy, completeness, or content.)



Mohali cloud kitchen run by deaf and mute parents finds its voice through their son


https://youtube.com/@quietlydeliciouss?si=rBkg_kcZLDf1jXOL

A video from Mohali featuring a family operating a cloud kitchen has captured attention for its display of communication and teamwork, as a young boy helps his deaf and mute parents share details about their food
.

A cloud kitchen in Mohali has unexpectedly become a symbol of perseverance online. Run by a deaf and mute couple, the business finds its voice through their young son, whose simple explanations have left viewers deeply moved.

The clip, shared on X, features a deaf and mute couple running a home-based food business, with their son proudly explaining each dish they prepare. “Some people inspire without words,” the caption read, urging locals to support the family. And that sentiment is exactly what viewers seem to have embraced.

Originally posted by the Instagram account Quietly Delicious, run by Anmol and Vanshpreet, the video captures a simple daily routine. The boy stands in front of the camera, calmly describing the thali on offer. Behind him, his mother communicates entirely through gestures. She points to a wok, indicating the vegetables she has cooked for the day’s tiffin orders. Watching her closely, the child turns to the camera and says, “Ye hai aloo, gajar, matar (these are potatoes, carrots and peas),” his voice steady and confident.

The sequence repeats with another dish. The woman signs again, and her son instantly translates it as “kala chana.” Rice and rotis follow, each item carefully explained, each gesture faithfully carried across. There is no rush, no hesitation, only a quiet understanding that comes from shared routines and trust.

What has struck viewers most is not just the child’s ability to translate sign language so naturally, but the gentle teamwork within the family. The parents focus on cooking, the child on communication, all three moving in sync.




JKCA empowers J&K’s deaf cricketers with kitbags, gear to shine for India


Jammu, Jan 13: In a powerful display of inclusivity and commitment to grassroots talent, the Jammu and Kashmir Cricket Association (JKCA) has empowered two of J&K’s rising deaf cricketers—wicketkeeper-batter Umar Ashraf Beigh and dynamic all-rounder Hilal Wani—with top-tier kitbags and cricketing equipment.

This gesture equips them to represent India with distinction at the forthcoming Deaf Asia Cup 2026, set to ignite from January 18 at the iconic Barabati Stadium in Cuttack, Odisha.

Brig Anil Gupta, Member-Administration of JKCA, personally presented the premium gear during a heartfelt ceremony at the Pavilion Building, JKCA Hostel Ground, here today.

The thoughtfully curated kit includes two pairs of high-performance coloured batting pads, two superior-quality cricket bats, two pairs of professional cricket shoes, one wicketkeeping pad, one pair of wicketkeeping gloves, two pairs of elite batting gloves, and two durable quality kitbags—everything these athletes need to perform at their peak.

Addressing the gathering, Brig Anil Gupta emphasized JKCA’s unwavering resolve- “Under the visionary guidance of the BCCI and its President, Mithun Manhas, our Sub-Committee is dedicated to nurturing cricket at every level. We leave no stone unturned—or any talented player behind—ensuring that barriers like disability only fuel greater triumphs.”

His words resonated as a beacon for aspiring cricketers across the region, underscoring JKCA’s role in fostering an equitable sporting ecosystem.

Remarkably, the 16-member Indian squad boasts two proud representatives from J&K namely Umar Ashraf Beigh and Hilal Wani.

Their selection not only honours their grit and skill but also spotlights J&K’s burgeoning cricket legacy on the national stage. As these warriors gear up for the Asia Cup, JKCA’s support reaffirms that true champions rise when opportunity meets preparation.



Thursday, January 1, 2026

கோவையை கலக்கும் ‘நம்ம லாண்டரி’ - மாற்றுத்திறனாளிகளின் முயற்சிக்கு பெருகும் வரவேற்பு




 

31.12.2025 
 ஏராளமான மாற்றுத்திறனாளிகள் எனது தந்தையிடம் வந்து வேலைவாய்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் ‘நம்ம லாண்டரி’ தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சினேகா.

"வாய் பேச முடியாமல், காது கேட்காத நிலையிலும் தகவல் தொடர்பு பிரச்சனை எங்களுக்கு இருந்ததில்லை. வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கிறார்கள். கூகுள் மேப் (google map) மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே நேரடியாக சென்று துணிகளை வாங்கி வருகிறோம்" என்கிறார் முரளி.

வேலைவாய்ப்பு... இது தான் இன்றைய இளைஞர்களின் மிகப் பெரிய கனவு. பெரிய படிப்புகள் முடித்திருந்தாலும், வேலை தேடி அலையும் பலரை நாம் பார்த்து வருகிறோம். அதிலும், மாற்றுத்திறனாளிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனாலும், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி தம்பதி, தங்களைப் போன்றவர்களுக்கு சப்தமில்லாமல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கோவையில் தற்போது பிரபலமாகி வருகிறது 'நம்ம லாண்டரி'. துணிகளை துவைத்து, காய வைத்து அயர்ன் பண்ணிக் கொடுக்கிற லாண்டரி கடையில் என்ன சிறப்பு இருக்க முடியும்? ஆனால்'நம்ம லாண்டரி'க்கு நிறைய சிறப்புகள் உள்ளன. இதனை நடத்தி வருபவர்கள் முரளி மற்றும் அவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்கள். இது மட்டுமல்லாமல், இங்கு பணியாற்றி வரும் 5 பேரும் வேலைவாய்ப்பின்றி தவித்து வந்த காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள்.

உணவு, உடை, உறைவிடம். இது தான் மனிதனின் அத்யாவசிய தேவை. இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு எந்த தொழிலை தொடங்கினாலும் சாதிக்கலாம் என்பது தொழில் துறையில் வெற்றி பெற்றவர்களின் சூட்சமம். அதனை பின்பற்றி, லாண்டரி தொழிலில் நுழைந்து சாதனை படைத்து வருகின்றனர் மாற்றுத்திறனாளிகளான முரளி மற்றும் சுதா.



கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர்கள் முரளி மற்றும் சுதா. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களைப் போன்ற செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், Deaf Leaders Foundation என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், ஏராளமானவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வழங்கியதோடு, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அவர்களது முயற்சியின் அடுத்த பரிணாமமாக தொடங்கியது தான் 'நம்ம லாண்டரி'. தங்களின் Deaf Leaders Foundation அமைப்பின் மூலம் கடந்த ஜனவரி மாதம் கோவை சாய்பாபா காலனியில் ‘நம்ம லாண்டரி‘யை தொடங்கினர். சுமார் 2 லட்ச ரூபாய் முதலீட்டில் இந்த கிளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தாலும், இப்போது சாய்பாபா காலனி பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அருகில் உள்ள பகுதி மக்களும் ‘நம்ம லாண்டரி‘க்கு கை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.


இதற்கு காரணம் இங்கு பணியாற்றும் 5 பேரும் காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்களது தொழில் நேர்த்தி என்பது தான். தற்போது ‘நம்ம லாண்டரி‘யின் 2-வது கிளையை கணுவாய் பகுதியில் விரைவில் திறக்கப்படவுள்ளது. இது குறித்து கேள்விபட்டவுடன், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகக் குழு, சாய்பாபா காலனியில் உள்ள ‘நம்ம லாண்டரி‘க்கு சென்றோம்.

அங்கு நாம் சென்ற போது, அங்கிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பணியாளர்கள், துணிகளை அயர்ன் பண்ணிக் கொண்டிருந்தனர். நாம் சென்றது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் துணிகளை நேர்த்தியாக மடித்து அழகாக அயர்ன் பண்ணிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ‘நம்ம லாண்டரி‘யின் உரிமையாளரும், Deaf Leaders Foundation இயக்குநருமான முரளியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். அப்போது அவர் நம்மிடம் சைகை மொழியில் பேசத் தொடங்கினார். அவர் பேசுவதை அவரது மகள் சினேகா நமக்கு மொழிபெயர்த்தார்.

நம்மிடம் பேசிய முரளி, “கடந்த ஒரு வருடமாக ‘நம்ம லாண்டரி’ என்ற பெயரில் சலவை நிலையம் (Namma Laundry) நடத்தி வருகிறோம். இரண்டு தனியார் அமைப்புகளின் உதவியுடன், வேலையில்லாமல் இருந்த காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாத (Deaf and dumb people) 5 பேரை கொண்டு இதனை தொடங்கினோம்“ என்றார்.

மேலும், ‘நம்ம லாண்டரி‘யின் வாடிக்கையாளர்கள், அன்றாடப் பணிகள் குறித்து நாம் கேட்டோம். அதற்கு பதில் அளித்த அவர், “தினமும் 300 முதல் 400 வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இங்கு துணி துவைத்தல் (washing), இஸ்திரி (Iron), நீராவி சலவை (steam Iron), உலர் சலவை (dry cleaning) ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து தருகிறோம்“ என்றார்.

இங்கு பணியாற்றுபவர்கள் வாய் பேச முடியாத, காது கேளாதவர்கள் என்பதால், வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள்? என்று கேட்டோம். அதற்கு பதில் அளித்த முரளி, “எங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தொடர்பில் இதுவரை எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ‘நம்ம லாண்டரி‘க்கென தனி வாட்ஸ்ஆப் எண் வைத்துள்ளோம்.

இதில் வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள். சிலர் இங்கு வந்து துணியை கொடுத்து சலவை செய்து அயர்ன் பண்ணி வாங்கிச் செல்கின்றனர். மேலும், வர முடியாதவர்கள் எங்களை தொடர்பு கொண்டால், கூகுள் மேப் (google map) மூலம் அவர்களது முகவரியை அனுப்பச் சொல்வோம். அவர்கள் அனுப்பிய பிறகு, வாடிக்கையளர்களின் வீடுகளுக்கு சென்று துணிகளை வாங்கி வருவோம்“ என்று அவர்கள் சலவை செய்து தரும் துணி போல் 'பளிச்' என்று பதில் அளித்தார்.

“இந்த கிளையில், 5 பேர் முழுநேரமும், டெலிவரிக்காக ஒருவர் பகுதி நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர். ‘நம்ம லாண்டரி‘யின் 2-வது கிளையை கணுவாய் பகுதியில் விரைவில் தொடங்க உள்ளோம். தொடர்ந்து 3-வது கிளையை சூலூர் பகுதியில் திறக்க உள்ளோம். அந்த கிளைகளிலும், எங்களைப் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளோம். எங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு அளித்து வருகின்றனர்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து, சினேகா நம்மிடம் பேசுகையில், “ஏராளமான மாற்றுத்திறனாளிகள் எனது தந்தையிடம் வந்து வேலைவாய்ப்பு கேட்டுச் சென்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கிலே ‘நம்ம லாண்டரி‘யை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வாட்ஸ்ஆப் மூலம் அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. 100-க்கும் அதிகமானோர் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

எங்களுக்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு தருகின்றனர். சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு உதவியின் கீழ் எங்களுக்கு சிலர் உதவி செய்கின்றனர். அதனை நாங்களும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். மற்ற இடங்களை காட்டிலும் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு சலவை செய்து கொடுக்கிறோம். ஒரு துணியை ‘நம்ம லாண்டரி‘யில் அயர்னிங் செய்வதற்கு ரூ.12, ஒரு கிலோ துணியை சலவை செய்வதற்கு ரூ.120 மட்டுமே கட்டணமாக பெறுகிறோம்” என்றார்.




Deaf and mute girl molested, extorted of Rs 7.7 lakh


30.12.2025
Rajkot: The Bhaktinagar Police arrested a man for allegedly molesting and extorting a 17-year-old deaf and mute girl who was forced to steal Rs 7.70 lakh cash which her parents had set aside for a relative's marriage.

According to the police, the ordeal reportedly began on Sept 27 when a neighbouring teenage girl lured the victim to a nearby garden. When she reached there, the girl introduced her to her boyfriend, who was an adult.

According to the police complaint, the boyfriend of the victim's neighbour molested the victim and took several objectionable photographs of her.

Despite being unable to speak or hear, the victim can read and write to some extent. The accused reportedly used written notes to threaten her, claiming they would share the photos with her relatives and circulate them on social media if she did not pay them.

The crime remained hidden for over two months until the girl's family prepared for a nephew's wedding held between Dec 4 and 6. The family set aside Rs 7.70 lakh for wedding expenses, but when they went to retrieve the cash, the cupboard was empty.

Upon being questioned, the victim used sign language to reveal the harrowing details of the garden incident, the harassment, and the subsequent extortion.

She explained that she was handing over the cash in instalments to stop the accused from shaming her family.

Investigating officer MM Sarvaiya said, "We arrested the accused who works as a labourer. Our primary focus now is the recovery of the extorted money. We are also examining the mobile phone used to take the photos to ensure they were not circulated online."

The accused was booked under the sections 308(2) and 61(2) of Bharatiya Nyaya Sanhita (BNS) and the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

The police are also investigating the degree of involvement of the neighbour who allegedly acted as an accomplice.