20.01.2026
கோவை: கோவையில் பேச முடியாத மாற்றுத் திறனாளி நள்ளிரவில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லம்பாளையம் கணபதியப்பன் கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (49). இவரது மனைவி சுமதி. இவா்கள் இருவரும் காது மற்றும் வாய்ப்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இந்தத் தம்பதி வேலை பாா்த்து வந்தனா்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த ரங்கநாதன் அந்தப் பகுதியில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை: கோவையில் பேச முடியாத மாற்றுத் திறனாளி நள்ளிரவில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லம்பாளையம் கணபதியப்பன் கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (49). இவரது மனைவி சுமதி. இவா்கள் இருவரும் காது மற்றும் வாய்ப்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இந்தத் தம்பதி வேலை பாா்த்து வந்தனா்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த ரங்கநாதன் அந்தப் பகுதியில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


No comments:
Post a Comment