
21.01.2026
பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20வது ஆண்டு நிறைவு விழா ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிகிச்சை பெற்ற குழந்தைகள் ஆடல் பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ராமச்சந்திராவின் முதல் காக்ளியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை தனது 3வது வயதில் மேற்கொண்ட கல்யாணி கார்த்திக் தற்போது முதுகலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கிறார். அவர் பரத நாட்டிய நடனம் ஆடினார். ஸ்ரீ ராமச்சந்திராவில் காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையில் இதுவரை 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இக்குழந்தைகளில் பலர் இன்று தங்கள் குறைபாடுகளிலிருந்து மீண்டு, சாதாரண குழந்தைகளைப் போல பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர் என்று வேந்தர் வி.ஆர். வெங்கடாசலம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய இந்திய மாண்டிசொரி மையத்தின் தலைவர் உமா சங்கர், கேட்கும்திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் தகுந்த முறையில் சிகிச்சை வழங்கி வரும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், கேட்பியல் மற்றும் பேச்சுமொழித்துறை பயிற்சி நிபுணர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் மறுவாழ்வு நிபுணர்கள் உள்ளிட்டவர்களின் அர்ப்பணிப்பு சேவைகளை வெகுவாக பாராட்டினார்.
மாண்டிசொரி கல்வித் தத்துவத்தை வலியுறுத்திய அவர், குழந்தைகளின் மீது வெளிப்புறக் கருத்துக்களை திணிப்பதைவிட, அவர்கள் தங்களுக்கே உரிய கற்றல் பாதையில் முன்னேற வழிகாட்டுதல் மிக முக்கியம் எனக்குறிப்பிட்டார்.
மேலும் அவர் காக்ளியர் கருவி பொருத்திய குழந்தைகளின் பெற்றோருக்கான வழிகாட்டு முறை கையேடு ஒன்றை வெளியிட்டார். ஸ்ரீ இராமச்சந்திரா காக்ளியர் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு முகாம்களை பல கிராமப்புறங்களில் ஏற்பாடு செய்து பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளின் மறுவாழ்விற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கி வருகிறது.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் உமாசேகர், இணை துணைவேந்தர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக்கல்லூரி தலைவர் Dr. K. பாலாஜி சிங், மருத்துவ இயக்குனர் ஆர்.பி. சுதாகர் சிங், மருத்துவக் கண்காணிப்பாளர் P. சுரேந்திரன், காது, மூக்கு,
தொண்டை அறுவை சிகிச்சைத் துறை தலைவர் S. பிரசன்ன குமார், கேட்பியல் மற்றும் பேச்சு மொழித்துறைத் முதல்வர் பிரகாஷ் பூமிநாதன், சிறப்பு அலுவலர் ரூபா நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிகிச்சை பெற்ற குழந்தைகள் ஆடல் பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ராமச்சந்திராவின் முதல் காக்ளியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை தனது 3வது வயதில் மேற்கொண்ட கல்யாணி கார்த்திக் தற்போது முதுகலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கிறார். அவர் பரத நாட்டிய நடனம் ஆடினார். ஸ்ரீ ராமச்சந்திராவில் காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையில் இதுவரை 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இக்குழந்தைகளில் பலர் இன்று தங்கள் குறைபாடுகளிலிருந்து மீண்டு, சாதாரண குழந்தைகளைப் போல பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர் என்று வேந்தர் வி.ஆர். வெங்கடாசலம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய இந்திய மாண்டிசொரி மையத்தின் தலைவர் உமா சங்கர், கேட்கும்திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் தகுந்த முறையில் சிகிச்சை வழங்கி வரும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், கேட்பியல் மற்றும் பேச்சுமொழித்துறை பயிற்சி நிபுணர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் மறுவாழ்வு நிபுணர்கள் உள்ளிட்டவர்களின் அர்ப்பணிப்பு சேவைகளை வெகுவாக பாராட்டினார்.
மாண்டிசொரி கல்வித் தத்துவத்தை வலியுறுத்திய அவர், குழந்தைகளின் மீது வெளிப்புறக் கருத்துக்களை திணிப்பதைவிட, அவர்கள் தங்களுக்கே உரிய கற்றல் பாதையில் முன்னேற வழிகாட்டுதல் மிக முக்கியம் எனக்குறிப்பிட்டார்.
மேலும் அவர் காக்ளியர் கருவி பொருத்திய குழந்தைகளின் பெற்றோருக்கான வழிகாட்டு முறை கையேடு ஒன்றை வெளியிட்டார். ஸ்ரீ இராமச்சந்திரா காக்ளியர் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு முகாம்களை பல கிராமப்புறங்களில் ஏற்பாடு செய்து பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளின் மறுவாழ்விற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கி வருகிறது.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் உமாசேகர், இணை துணைவேந்தர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக்கல்லூரி தலைவர் Dr. K. பாலாஜி சிங், மருத்துவ இயக்குனர் ஆர்.பி. சுதாகர் சிங், மருத்துவக் கண்காணிப்பாளர் P. சுரேந்திரன், காது, மூக்கு,
தொண்டை அறுவை சிகிச்சைத் துறை தலைவர் S. பிரசன்ன குமார், கேட்பியல் மற்றும் பேச்சு மொழித்துறைத் முதல்வர் பிரகாஷ் பூமிநாதன், சிறப்பு அலுவலர் ரூபா நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment