
16.01.2026
சென்னை: பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத்திறனாளி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜலீல் முகைதீன் தலைமை வகித்தார். போராட்டத்தில், குடும்பத்துடன் பங்கேற்ற மாற்றத்திறனாளிகள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.போராட்டம் குறித்து, ஜலீன் முகைதீன் கூறியதாவது:
அரசு துறையில் தற் காலிகமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, பணி நிரந்தரம் செய்யும் வகையில், கடந்த 2008ல் அரசாணை எண் 151ஐ அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி, அரசு துறையில் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய முறையில், இரண்டு ஆண்டுகள் பணி செய்த, 1,077 பேர் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த நவம்பரில், அரசு துறைக ளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டி தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் வகையில், அரசாணை 24ஐ வெளியிட்டு, அதிகாரி கள் பழைய அரசாணை 151ஐ ரத்து செய்துள்ளனர்.
இதனால், கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் வேண்டி காத்திருக்கும் நாங்கள், மி குந்த மன வேதனையில் உள்ளோம்.
எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த அரசாணை 151ஐ மீண்டும் செயல்படுத்தி, அதன்படி நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இதை அதிகாரிகள் செயல்படுத்தும் வரை, காத்திருப்பு போராட்டத்தை மேற்கொள்ளுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜலீல் முகைதீன் தலைமை வகித்தார். போராட்டத்தில், குடும்பத்துடன் பங்கேற்ற மாற்றத்திறனாளிகள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.போராட்டம் குறித்து, ஜலீன் முகைதீன் கூறியதாவது:
அரசு துறையில் தற் காலிகமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, பணி நிரந்தரம் செய்யும் வகையில், கடந்த 2008ல் அரசாணை எண் 151ஐ அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி, அரசு துறையில் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய முறையில், இரண்டு ஆண்டுகள் பணி செய்த, 1,077 பேர் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த நவம்பரில், அரசு துறைக ளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டி தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் வகையில், அரசாணை 24ஐ வெளியிட்டு, அதிகாரி கள் பழைய அரசாணை 151ஐ ரத்து செய்துள்ளனர்.
இதனால், கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் வேண்டி காத்திருக்கும் நாங்கள், மி குந்த மன வேதனையில் உள்ளோம்.
எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த அரசாணை 151ஐ மீண்டும் செயல்படுத்தி, அதன்படி நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இதை அதிகாரிகள் செயல்படுத்தும் வரை, காத்திருப்பு போராட்டத்தை மேற்கொள்ளுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment