FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 17, 2026

பணி நிரந்தரம் செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்



16.01.2026 
சென்னை: பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத்திறனாளி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜலீல் முகைதீன் தலைமை வகித்தார். போராட்டத்தில், குடும்பத்துடன் பங்கேற்ற மாற்றத்திறனாளிகள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.போராட்டம் குறித்து, ஜலீன் முகைதீன் கூறியதாவது:

அரசு துறையில் தற் காலிகமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, பணி நிரந்தரம் செய்யும் வகையில், கடந்த 2008ல் அரசாணை எண் 151ஐ அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, அரசு துறையில் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய முறையில், இரண்டு ஆண்டுகள் பணி செய்த, 1,077 பேர் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த நவம்பரில், அரசு துறைக ளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டி தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் வகையில், அரசாணை 24ஐ வெளியிட்டு, அதிகாரி கள் பழைய அரசாணை 151ஐ ரத்து செய்துள்ளனர்.

இதனால், கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் வேண்டி காத்திருக்கும் நாங்கள், மி குந்த மன வேதனையில் உள்ளோம்.

எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த அரசாணை 151ஐ மீண்டும் செயல்படுத்தி, அதன்படி நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இதை அதிகாரிகள் செயல்படுத்தும் வரை, காத்திருப்பு போராட்டத்தை மேற்கொள்ளுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment