FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 17, 2026

மாற்றுதிறனாளிகள் இலவச பஸ் பாஸ் வேண்டுமா? சிறப்பு முகாம்கள் தொடக்கம்...விண்ணப்பிப்பது எப்படி?


தமிழ்நாடு முழுவதும் மாற்றுதிறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

16.01.2026 
வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற 31.01.2026 வரை சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பயண அட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தில் வசிக்கும், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற ஏதுவாக, சிறப்பு முகாம் மூலம் ஆன்லைனில் பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறப்பு முகாம்கள் வரும் ஜனவரி 31-ம்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் (அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து) சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நடக்கிறது. இந்த கார்டை பெற இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள (பின்புறம் இ-சேவை அருகில்) வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அந்தந்த மாவட்ட நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

தென் சென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலை நாட்களில் மட்டும் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்களுக்கு சென்று விண்ணப்பித்து இலவச பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள், தகுதிகள் :

இதனை விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, யுடிஐடிஅட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மருத்துவ சான்று, கல்வி பயில்வதற்கான சான்று, பணியிடச் சான்று ஆகியவற்றை நேரில் எடுத்து வர வேண்டும்.

தனியார் நிறுவனப் பணியாளர்கள், மாணவர்கள், சிறப்புப் பள்ளி மாணவர்கள், பயண வரம்புகள் மற்றும் பிரிவுகள், பார்வைக் குறைபாடுடையோர், கை, கால் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச இயலாதவர்கள், சிகிச்சை மற்றும் பயிற்சி எடுக்கும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.



No comments:

Post a Comment