FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, February 28, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு: மார்ச் 2 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, 28 February 2015
சென்னையில் மார்ச் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு, கலாசார போட்டிகளுக்கு மார்ச் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலைவர் ஜி.சிதம்பரநாதன் சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியது:

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் மார்ச் 6-ஆம் தேதியன்று தியாகராய நகர் போக் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி திருமண மண்டபத்திலும், விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் மார்ச் 6,7 ஆகிய இரு நாள்களும் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25 கடைசித் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மாற்றுத் திறனாளிகளின் வேண்டுகோளை ஏற்று தற்போது திங்கள்கிழமை (மார்ச்.2) வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnhfctrust.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து எண். 21ஏஏ, ஏரிக்கரைச் சாலை, கோட்டூர், சென்னை - 600085 என்ற முகவரிக்கு மார்ச் 2-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044 - 24405524, 9840305804, 9840433964 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment