FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, February 28, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு: மார்ச் 2 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, 28 February 2015
சென்னையில் மார்ச் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு, கலாசார போட்டிகளுக்கு மார்ச் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலைவர் ஜி.சிதம்பரநாதன் சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியது:

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் மார்ச் 6-ஆம் தேதியன்று தியாகராய நகர் போக் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி திருமண மண்டபத்திலும், விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் மார்ச் 6,7 ஆகிய இரு நாள்களும் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25 கடைசித் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மாற்றுத் திறனாளிகளின் வேண்டுகோளை ஏற்று தற்போது திங்கள்கிழமை (மார்ச்.2) வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnhfctrust.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து எண். 21ஏஏ, ஏரிக்கரைச் சாலை, கோட்டூர், சென்னை - 600085 என்ற முகவரிக்கு மார்ச் 2-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044 - 24405524, 9840305804, 9840433964 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment