FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, February 1, 2015

வரிசையில் இனி நிற்க வேண்டாம்: மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆன்லைனில் ரயில் டிக்கெட்

01.02.2015, மானாமதுரை:
 மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது. இந்தியன் ரயில்வேயில் தினமும் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு பஸ்களை விட சவுகரியமானது என்பதால் அதிகமானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் ஆண்டுதோறும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரயில் நிலையங்களில் நெரிசலை குறைக்க ஆன்லைன் புக்கிங் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு அவர்களின் தகுதிக்கேற்ப பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கூடுதலாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகளில் முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்று, தங்களின் சான்றுகளை காட்டி சலுகை கட்டணத்தில் டிக்கெட் பெறும் முறை அமலில் உள்ளது. பண்டிகை காலங்களில் ரயில் முன்பதிவிற்கும், தட்கல் டிக்கெட் பெறுவதற்கும் ஸ்டேஷன்களில் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். மணிக்கணக்கில் மாற்றுத்திறனாளிகள் நின்று முன்பதிவு செய்து வந்ததால் கடும் அவதிப்பட்டனர். தங்களுக்கு ரயில்வே மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதுபற்றி ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், ‘‘இனி மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு மையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. ஐஆர்சிடிசி தனது வெப்சைட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இணைப்பை உருவாக்கி உள்ளது. இதில் மாற்றுத்திறனாளியின் பெயர், பிறந்த தேதி, வயது, ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ள பதிவு எண், மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவரின் சான்றிதழ் எண் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஆன்லைனில் பதில் அளிக்கவேண்டும்.

இதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் ரகசிய எண் வழங்குகிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயண துணைக்கு வருபவர் பெயர், முகவரி, உறவுமுறையும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது‘ என்றனர்.


No comments:

Post a Comment