FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, February 1, 2015

வரிசையில் இனி நிற்க வேண்டாம்: மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆன்லைனில் ரயில் டிக்கெட்

01.02.2015, மானாமதுரை:
 மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது. இந்தியன் ரயில்வேயில் தினமும் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு பஸ்களை விட சவுகரியமானது என்பதால் அதிகமானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் ஆண்டுதோறும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரயில் நிலையங்களில் நெரிசலை குறைக்க ஆன்லைன் புக்கிங் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு அவர்களின் தகுதிக்கேற்ப பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கூடுதலாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகளில் முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்று, தங்களின் சான்றுகளை காட்டி சலுகை கட்டணத்தில் டிக்கெட் பெறும் முறை அமலில் உள்ளது. பண்டிகை காலங்களில் ரயில் முன்பதிவிற்கும், தட்கல் டிக்கெட் பெறுவதற்கும் ஸ்டேஷன்களில் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். மணிக்கணக்கில் மாற்றுத்திறனாளிகள் நின்று முன்பதிவு செய்து வந்ததால் கடும் அவதிப்பட்டனர். தங்களுக்கு ரயில்வே மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதுபற்றி ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், ‘‘இனி மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு மையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. ஐஆர்சிடிசி தனது வெப்சைட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இணைப்பை உருவாக்கி உள்ளது. இதில் மாற்றுத்திறனாளியின் பெயர், பிறந்த தேதி, வயது, ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ள பதிவு எண், மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவரின் சான்றிதழ் எண் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஆன்லைனில் பதில் அளிக்கவேண்டும்.

இதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் ரகசிய எண் வழங்குகிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயண துணைக்கு வருபவர் பெயர், முகவரி, உறவுமுறையும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது‘ என்றனர்.


No comments:

Post a Comment