FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, February 16, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் கொடுமை! உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

14.02.2015,
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வல்லுறவு கொடுமையை மூடி மறைக்க முயற்சிக்கும் காவல் துறையினர் மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்கொச்சாவூரைச் சேர்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 பேரால் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட கொடுமையான நிகழ்வில், துவக்கம் முதலே காவல்துறையும், மருத்துவர்களும் அதை மூடி மறைக்க முயற்சித்து வந்துள்ளனர். 6 நாட்கள் கழித்தே காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

முக்கிய தடயங்கள் அப்போதே அழிந்து போயிருக்கும். முதலில் பரிசோதித்த தேன்கனிக்கோட்டை மருத்துவர் தலையில் பட்ட காயத்தை மட்டுமே பதிவு செய்துள்ளார். பின்னர் ஓசூர் மருத்துவமனையின் பெண் மருத்துவர், பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்று சான்றிதழ் அளித்தார்.

பாலியல் வல்லுறவு என்பதற்கான வரையறை விரிவு படுத்தப்பட்டு, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்கான விளக்கங்கள் வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ள சூழலில், திட்டவட்டமாக வல்லுறவு நடக்கவில்லை என்று மருத்துவர் முடிவுக்கு வர முடியுமா என்பது முக்கியமான கேள்வி. நீதிமன்றத் தலையீட்டின் படி தர்மபுரியில் மறு பரிசோதனை செய்யப் பட்டதில், ஓசூர் சான்றிதழுக்கு முரணாக அறிக்கை வந்துள்ளது.

ஆனால், அதை நிராகரிக்கும் விதத்தில், தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மருத்துவரிடம், குற்றவாளிகளின் வழக்கறிஞரைப் போல் கேள்விகள் கேட்டு பதில் பெற்றிருக்கிறார். சம்பவத்தின் போது அணிந்திருந்த உடைகள் மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருக்கும் போது, தற்போது சிறுமி அணிந்திருக்கும் உடையை தர்மபுரி மருத்துவமனையில் ஆய்வு செய்து அதில் எவ்விதத் தடயமும் இல்லை என்று சொல்லப் பட்டுள்ளது.

விசாரணையின் பல கட்டங்களில் குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மீறப்பட்டுள்ளன. காவல்நிலையத்தில் சிறுமியும், அவளது தந்தையும் வைக்கப் பட்டு தாக்கப் பட்டிருக்கின்றனர். மகளிர் காவல் நிலைய ஆய்வாளரும் மற்றும் டி.எஸ்.பி.யும் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப் படுகிறது. ஜனவரி 30ம் தேதி, எங்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா கராத் அவர்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் அமைப்பினருடன் வந்து, டிஜிபி அவர்களை சந்தித்து, விசாரணையில் நடக்கக் கூடிய பல குளறுபடிகளைச் சுட்டிக் காட்டிய பின்னும், அவை சரி செய்யப் படவில்லை. இது தொடர்ந்து தவறுகளை செய்ய ஊக்கமளித்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment