FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, February 16, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் கொடுமை! உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

14.02.2015,
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வல்லுறவு கொடுமையை மூடி மறைக்க முயற்சிக்கும் காவல் துறையினர் மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்கொச்சாவூரைச் சேர்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 பேரால் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட கொடுமையான நிகழ்வில், துவக்கம் முதலே காவல்துறையும், மருத்துவர்களும் அதை மூடி மறைக்க முயற்சித்து வந்துள்ளனர். 6 நாட்கள் கழித்தே காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

முக்கிய தடயங்கள் அப்போதே அழிந்து போயிருக்கும். முதலில் பரிசோதித்த தேன்கனிக்கோட்டை மருத்துவர் தலையில் பட்ட காயத்தை மட்டுமே பதிவு செய்துள்ளார். பின்னர் ஓசூர் மருத்துவமனையின் பெண் மருத்துவர், பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்று சான்றிதழ் அளித்தார்.

பாலியல் வல்லுறவு என்பதற்கான வரையறை விரிவு படுத்தப்பட்டு, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்கான விளக்கங்கள் வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ள சூழலில், திட்டவட்டமாக வல்லுறவு நடக்கவில்லை என்று மருத்துவர் முடிவுக்கு வர முடியுமா என்பது முக்கியமான கேள்வி. நீதிமன்றத் தலையீட்டின் படி தர்மபுரியில் மறு பரிசோதனை செய்யப் பட்டதில், ஓசூர் சான்றிதழுக்கு முரணாக அறிக்கை வந்துள்ளது.

ஆனால், அதை நிராகரிக்கும் விதத்தில், தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மருத்துவரிடம், குற்றவாளிகளின் வழக்கறிஞரைப் போல் கேள்விகள் கேட்டு பதில் பெற்றிருக்கிறார். சம்பவத்தின் போது அணிந்திருந்த உடைகள் மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருக்கும் போது, தற்போது சிறுமி அணிந்திருக்கும் உடையை தர்மபுரி மருத்துவமனையில் ஆய்வு செய்து அதில் எவ்விதத் தடயமும் இல்லை என்று சொல்லப் பட்டுள்ளது.

விசாரணையின் பல கட்டங்களில் குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மீறப்பட்டுள்ளன. காவல்நிலையத்தில் சிறுமியும், அவளது தந்தையும் வைக்கப் பட்டு தாக்கப் பட்டிருக்கின்றனர். மகளிர் காவல் நிலைய ஆய்வாளரும் மற்றும் டி.எஸ்.பி.யும் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப் படுகிறது. ஜனவரி 30ம் தேதி, எங்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா கராத் அவர்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் அமைப்பினருடன் வந்து, டிஜிபி அவர்களை சந்தித்து, விசாரணையில் நடக்கக் கூடிய பல குளறுபடிகளைச் சுட்டிக் காட்டிய பின்னும், அவை சரி செய்யப் படவில்லை. இது தொடர்ந்து தவறுகளை செய்ய ஊக்கமளித்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment