FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, February 11, 2015

மதங்களை கடந்து ஆன்மிக பயணம் வந்த குஜராத் மாற்றுத் திறனாளிகள்

ராமேஸ்வரம் : 
மதங்களை கடந்து ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ராமேஸ்வரம் வந்த குஜராத் மாற்று திறனாளிகளை, தமிழக பக்தர்கள் பாராட்டினார்கள்.

குஜராத் சூரத் நகர் விக்லாங் கல்யாண் சமூக அமைப்பின் நிர்வாகியான மாற்று திறனாளி கோபால்பாய் தலைமையில், இஸ்லாமியர்கள் உட்பட 21 மாற்று திறனாளிகளும், இவர்களுக்கு உதவியாக 21சமூக ஆர்வலர்களும், கடந்த பிப்.,1 ல், தென் இந்தியாவில் ஆன்மிக சுற்றுப்பயணம் துவக்கினர். இவர்கள், கர்நாடாக சாமூண்டிஸ்வரி, கேரளா குருவாயூர் கோயில்களிலும், கன்னியாகுமரியிலும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்த பின், மதுரை, திருவண்ணாமலை, சென்னை, திருப்பதி கோயில்களுக்கு சென்று விட்டு, 5 ஆயிரம் கி.மீ., தூர ஆன்மிக சுற்றுப்பயணத்தை பிப்., 14 ல், சூரத்தில் நிறைவு செய்கின்றனர். மதங்களை கடந்து ஆன்மிக பயணம் மேற்கொண்ட இவர்களை, தமிழக பக்தர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து கோபால்பாய் கூறியதாவது: சாதி, மத பேதமின்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், மாற்று திறனாளிகள் தன்நம்பிக்கை இழக்கக்கூடாது,மத ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தென் இந்தியாவில் 5 ஆயிரம் கி.மீ., தூரம் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment