FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, February 11, 2015

மதங்களை கடந்து ஆன்மிக பயணம் வந்த குஜராத் மாற்றுத் திறனாளிகள்

ராமேஸ்வரம் : 
மதங்களை கடந்து ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ராமேஸ்வரம் வந்த குஜராத் மாற்று திறனாளிகளை, தமிழக பக்தர்கள் பாராட்டினார்கள்.

குஜராத் சூரத் நகர் விக்லாங் கல்யாண் சமூக அமைப்பின் நிர்வாகியான மாற்று திறனாளி கோபால்பாய் தலைமையில், இஸ்லாமியர்கள் உட்பட 21 மாற்று திறனாளிகளும், இவர்களுக்கு உதவியாக 21சமூக ஆர்வலர்களும், கடந்த பிப்.,1 ல், தென் இந்தியாவில் ஆன்மிக சுற்றுப்பயணம் துவக்கினர். இவர்கள், கர்நாடாக சாமூண்டிஸ்வரி, கேரளா குருவாயூர் கோயில்களிலும், கன்னியாகுமரியிலும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்த பின், மதுரை, திருவண்ணாமலை, சென்னை, திருப்பதி கோயில்களுக்கு சென்று விட்டு, 5 ஆயிரம் கி.மீ., தூர ஆன்மிக சுற்றுப்பயணத்தை பிப்., 14 ல், சூரத்தில் நிறைவு செய்கின்றனர். மதங்களை கடந்து ஆன்மிக பயணம் மேற்கொண்ட இவர்களை, தமிழக பக்தர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து கோபால்பாய் கூறியதாவது: சாதி, மத பேதமின்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், மாற்று திறனாளிகள் தன்நம்பிக்கை இழக்கக்கூடாது,மத ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தென் இந்தியாவில் 5 ஆயிரம் கி.மீ., தூரம் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment