FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, February 18, 2015

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவி விஷம் குடித்து தற்கொலை

18.02.2015, குமாரபாளையம்:
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியின், இளம் மனைவி, பிளீச்சிங் பவுடரில் தண்ணீரில் கலந்து குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் எடையம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ரேவதி, 18. இவர்களுக்கு, ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்காக, குமாரபாளையம் பழைய போலீஸ் குடியிருப்பு வீதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, கடந்த, 15 நாட்களுக்கு முன் ரேவதி வந்தார்.
ரேவதியின் கணவர் பெரியசாமி வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. அவருடன் சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் சென்று கல் உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தவர் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை.தாரமங்கலத்தில் கோவில் திருவிழா என்பதால், கணவர் பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள் ரேவதியை அழைத்துள்ளனர். ஆனால், ரேவதி மறுத்துள்ளார். பெற்றோரும் கணவர் பெரியசாமி வீட்டுக்கு செல்ல வேண்டும் என, மகள் ரேவதியிடம் வலியுறுத்தினர்.வாய் பேசமுடியாத கணவர் வீட்டுக்கு சென்றால், மீண்டும் கல் உடைக்கும் தொழிலில் ஈடபட வேண்டி இருக்கும் என்பதால், பயந்து போன ரேவதி, கடந்த, 15ம் தேதி, வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து, தண்ணீர் கலந்து குடித்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ரேவதிக்கு திருமணமாகி, ஓராண்டே ஆவதால், ஆர்.டி.ஓ., சுமன் விசாரணை நடத்துகிறார்.

No comments:

Post a Comment