FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, February 18, 2015

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவி விஷம் குடித்து தற்கொலை

18.02.2015, குமாரபாளையம்:
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியின், இளம் மனைவி, பிளீச்சிங் பவுடரில் தண்ணீரில் கலந்து குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் எடையம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ரேவதி, 18. இவர்களுக்கு, ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்காக, குமாரபாளையம் பழைய போலீஸ் குடியிருப்பு வீதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, கடந்த, 15 நாட்களுக்கு முன் ரேவதி வந்தார்.
ரேவதியின் கணவர் பெரியசாமி வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. அவருடன் சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் சென்று கல் உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தவர் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை.தாரமங்கலத்தில் கோவில் திருவிழா என்பதால், கணவர் பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள் ரேவதியை அழைத்துள்ளனர். ஆனால், ரேவதி மறுத்துள்ளார். பெற்றோரும் கணவர் பெரியசாமி வீட்டுக்கு செல்ல வேண்டும் என, மகள் ரேவதியிடம் வலியுறுத்தினர்.வாய் பேசமுடியாத கணவர் வீட்டுக்கு சென்றால், மீண்டும் கல் உடைக்கும் தொழிலில் ஈடபட வேண்டி இருக்கும் என்பதால், பயந்து போன ரேவதி, கடந்த, 15ம் தேதி, வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து, தண்ணீர் கலந்து குடித்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ரேவதிக்கு திருமணமாகி, ஓராண்டே ஆவதால், ஆர்.டி.ஓ., சுமன் விசாரணை நடத்துகிறார்.

No comments:

Post a Comment