FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, February 17, 2015

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் சம்பத் உறுதி

16.02.2015, நெய்வேலி: 
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் சம்பத் பேசினார். நெய்வேலி காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் வட்டம் 19ல் உள்ள பவுஷ்டிகாவில் முதலாம் ஆண்டு விழாக் கூட்டம் நடந்தது. நலச்சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் ராமஉதயகுமார், அபு, தேவானந்தன், அல்போன்ஸ், நகர தலைவர் வெற்றிவேல், செயலர் கோவிந்தராஜ், ஜெ., பேரவை ஜெயக்குமார், மாவட்ட ஒன்றியக்குழு தேவநாதன், செயலர் கமலக்கண்ணன் மற்றும் ஜோதி முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் சரவணன் வரவேற்றார். அருண்மொழித்தேவன் எம்.பி., சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினர். விழாவில் அமைச்சர் சம்பத் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகையில், "நாட்டில் யார் யாரோ சங்கங்கள் அமைத்து ஏதேதோ செய்து வருகின்றனர். ஆனால் மாற்றத் திறனாளிகளுக்கு நலச்சங்கங்கள் அமைத்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். மாற்றத் திறனாளிகளுக்கு வீடு வழங்குவது, வேலை வாய்ப்பு என அனைத்து திட்டங்களிலும் 3 சதவீத இட ஒதுக்கீடுஒதுக்கீடு வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். கலெக்டரிடம் ஆலோசனை செய்து உங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்' என்றார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பிரமுகர்கள் செல்வராஜ், பாலசுப்ரமணியன், ராமலிங்கம், ஷேக் அப்துல்லா, கஞ்சமலை, தண்டபாணி, ராஜா, வழக்கறிஞர் செல்வமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment