FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, February 17, 2015

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் சம்பத் உறுதி

16.02.2015, நெய்வேலி: 
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் சம்பத் பேசினார். நெய்வேலி காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் வட்டம் 19ல் உள்ள பவுஷ்டிகாவில் முதலாம் ஆண்டு விழாக் கூட்டம் நடந்தது. நலச்சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் ராமஉதயகுமார், அபு, தேவானந்தன், அல்போன்ஸ், நகர தலைவர் வெற்றிவேல், செயலர் கோவிந்தராஜ், ஜெ., பேரவை ஜெயக்குமார், மாவட்ட ஒன்றியக்குழு தேவநாதன், செயலர் கமலக்கண்ணன் மற்றும் ஜோதி முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் சரவணன் வரவேற்றார். அருண்மொழித்தேவன் எம்.பி., சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினர். விழாவில் அமைச்சர் சம்பத் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகையில், "நாட்டில் யார் யாரோ சங்கங்கள் அமைத்து ஏதேதோ செய்து வருகின்றனர். ஆனால் மாற்றத் திறனாளிகளுக்கு நலச்சங்கங்கள் அமைத்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். மாற்றத் திறனாளிகளுக்கு வீடு வழங்குவது, வேலை வாய்ப்பு என அனைத்து திட்டங்களிலும் 3 சதவீத இட ஒதுக்கீடுஒதுக்கீடு வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். கலெக்டரிடம் ஆலோசனை செய்து உங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்' என்றார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பிரமுகர்கள் செல்வராஜ், பாலசுப்ரமணியன், ராமலிங்கம், ஷேக் அப்துல்லா, கஞ்சமலை, தண்டபாணி, ராஜா, வழக்கறிஞர் செல்வமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment