FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, February 16, 2015

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்ப உத்தரவு; 88 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமனம்

13.02.2015, கோவை : 
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு பள்ளிகளில், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில், நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 88 சிறப்பாசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, தமிழக அரசு சார்பில், காதுகேளாதோர், பார்வையற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் என்ற பிரிவுகளின் கீழ், சிறப்பு பள்ளிகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், தற்சமயம், 88 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை, விரைவில் நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பிரிவுகளின் கீழ், பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இப்பட்டியல் மூலம், காதுகேளாதோர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், 30 பேர் , பட்டதாரி அறிவியல் மற்றும் கணிதம் பாடத்துக்கு, 5 ஆசிரியர்களும், பார்வையற்றோர்களுக்கான அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், 37 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்கு, 4 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள், 4, இசை ஆசிரியர் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.மேலும், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள், 5 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேர் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ், 88 ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment