FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, February 16, 2015

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்ப உத்தரவு; 88 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமனம்

13.02.2015, கோவை : 
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு பள்ளிகளில், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில், நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 88 சிறப்பாசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, தமிழக அரசு சார்பில், காதுகேளாதோர், பார்வையற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் என்ற பிரிவுகளின் கீழ், சிறப்பு பள்ளிகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், தற்சமயம், 88 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை, விரைவில் நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பிரிவுகளின் கீழ், பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இப்பட்டியல் மூலம், காதுகேளாதோர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், 30 பேர் , பட்டதாரி அறிவியல் மற்றும் கணிதம் பாடத்துக்கு, 5 ஆசிரியர்களும், பார்வையற்றோர்களுக்கான அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், 37 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்கு, 4 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள், 4, இசை ஆசிரியர் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.மேலும், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள், 5 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேர் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ், 88 ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment