FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, February 17, 2015

DEAF மாற்றுத்திறன் சிறுமி பலாத்கார விவகாரம் அலட்சியமாக செயல்பட்ட எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

17.02.2015, கிருஷ்ணகிரி: 
அஞ்செட்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் தொந்தரவு புகார் சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, எஸ்.ஐ., ஏட்டு ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, அஞ்செட்டி அருகே 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, கடந்த டிசம்பர் மாதம் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார். இது குறித்து அவரது பெற்றோர், தங்களின் மகளை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் மனு தொடர்பாக, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினர்.

இது தொடர்பாக மகளிர் அமைப்பினர், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டாம் முறையாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானது தொடர்பாக, போலீசார் ஆரம்பத்தில் மெத்தன போக்கில் செயல்பட்டதாக வந்த புகாரின் மீது, மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து அஞ்செட்டி எஸ்ஐ ஜலபதி, தனிப்பிரிவு ஏட்டு செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment