FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 17, 2015

DEAF மாற்றுத்திறன் சிறுமி பலாத்கார விவகாரம் அலட்சியமாக செயல்பட்ட எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

17.02.2015, கிருஷ்ணகிரி: 
அஞ்செட்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் தொந்தரவு புகார் சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, எஸ்.ஐ., ஏட்டு ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, அஞ்செட்டி அருகே 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, கடந்த டிசம்பர் மாதம் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார். இது குறித்து அவரது பெற்றோர், தங்களின் மகளை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் மனு தொடர்பாக, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினர்.

இது தொடர்பாக மகளிர் அமைப்பினர், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டாம் முறையாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானது தொடர்பாக, போலீசார் ஆரம்பத்தில் மெத்தன போக்கில் செயல்பட்டதாக வந்த புகாரின் மீது, மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து அஞ்செட்டி எஸ்ஐ ஜலபதி, தனிப்பிரிவு ஏட்டு செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment