FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, February 26, 2015

DEAF மாற்றுத்திறனாளி ரயில் மோதி பலி

20.02.2015, கண்டமங்கலம்: 
கண்டமங்கலம் அருகே மாற்றுத்திறனாளி ரயில் மோதி இறந்தார். கண்டமங்கலம் அடுத்த பண்ணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு(33). இவர், கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்களில் மூட்டை சுமக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், நேற்று காலை சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரியை நோக்கிச் சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென, இவர் மீது மோதியது. இதில், இரண்டு கால்களும் துண்டான நிலையில் உயிருக்கு போராடியவரை மக்கள் மீட்டனர். உடன் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment