FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, October 5, 2016

தமிழக அரசு விருதுகள் 2016


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் 2016, 03.12.2016 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

1. சிறந்த பணியாளர் சுயதொழில் புரிபவர் (5 விருதுகள்)

கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தோர்)
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

2. சிறந்த ஆசிரியர் (3 விருதுகள்)

பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்தல்
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

3. சிறந்த சமூகப் பணியாளர் (1 விருது)

விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

4. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்(1 விருது)

விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

5. மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் (1 விருது)

விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

6. ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (2 விருதுகள்)

செவித்திறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

7. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்(2 விருதுகள்)

விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

பதிவிறக்கம் : விண்ணப்பம் (PDF, 128KB)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அல்லது தங்களது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக்ககொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுததினாளிக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 28.10.2016க்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

அனுப்பி வைக்கவேண்டிய முகவரி

மாற்றுத்திறனாளிக்க்கான மாநில ஆணையர்,
ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை,
கே.கே.நகர்,
சென்னை – 78

CLICK HERE >>

No comments:

Post a Comment