FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, October 8, 2016

பராமரிப்பற்ற கட்டிடத்தில் இயங்கி வரும் காதுகேளாத குழந்தைகளின் பள்ளி

07.10.2016, 
கடலூரில் தானே புயலுக்கு பிறகு கடும் சேதம் அடைந்த அரசு காதுகேளாதோர் பள்ளி, போதிய பராமரிப்பு இல்லாமல் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.

கடலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதுகேளாதோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டிடத்துக்கு இந்த பள்ளி மாற்றப்பட்டது. தற்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட செவித்திறன் இல்லாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியுடன் விடுதியும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தானே புயலின் போது ஏற்பட்ட சேதத்தால் தற்போது இடிந்து விழும் நிலையில், பள்ளி கட்டிடம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை மரியபாஸ்கா.

இதேபோல் பள்ளி கட்டிடம் சிமெண்ட் கூரையால் அமைக்கப்பட்டுள்ளதால், கடும் வெப்பம் நிலவுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மாணவர்கள். பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும், வாடகை வாங்குவதில் மட்டுமே மாவட்ட நிர்வாகம் அக்கறை செலுத்துவதாகவும், மாணவர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment