FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, October 8, 2016

பராமரிப்பற்ற கட்டிடத்தில் இயங்கி வரும் காதுகேளாத குழந்தைகளின் பள்ளி

07.10.2016, 
கடலூரில் தானே புயலுக்கு பிறகு கடும் சேதம் அடைந்த அரசு காதுகேளாதோர் பள்ளி, போதிய பராமரிப்பு இல்லாமல் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.

கடலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதுகேளாதோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டிடத்துக்கு இந்த பள்ளி மாற்றப்பட்டது. தற்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட செவித்திறன் இல்லாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியுடன் விடுதியும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தானே புயலின் போது ஏற்பட்ட சேதத்தால் தற்போது இடிந்து விழும் நிலையில், பள்ளி கட்டிடம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை மரியபாஸ்கா.

இதேபோல் பள்ளி கட்டிடம் சிமெண்ட் கூரையால் அமைக்கப்பட்டுள்ளதால், கடும் வெப்பம் நிலவுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மாணவர்கள். பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும், வாடகை வாங்குவதில் மட்டுமே மாவட்ட நிர்வாகம் அக்கறை செலுத்துவதாகவும், மாணவர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment