FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, October 8, 2016

பராமரிப்பற்ற கட்டிடத்தில் இயங்கி வரும் காதுகேளாத குழந்தைகளின் பள்ளி

07.10.2016, 
கடலூரில் தானே புயலுக்கு பிறகு கடும் சேதம் அடைந்த அரசு காதுகேளாதோர் பள்ளி, போதிய பராமரிப்பு இல்லாமல் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.

கடலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதுகேளாதோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டிடத்துக்கு இந்த பள்ளி மாற்றப்பட்டது. தற்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட செவித்திறன் இல்லாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியுடன் விடுதியும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தானே புயலின் போது ஏற்பட்ட சேதத்தால் தற்போது இடிந்து விழும் நிலையில், பள்ளி கட்டிடம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை மரியபாஸ்கா.

இதேபோல் பள்ளி கட்டிடம் சிமெண்ட் கூரையால் அமைக்கப்பட்டுள்ளதால், கடும் வெப்பம் நிலவுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மாணவர்கள். பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும், வாடகை வாங்குவதில் மட்டுமே மாவட்ட நிர்வாகம் அக்கறை செலுத்துவதாகவும், மாணவர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment