FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, October 8, 2016

பராமரிப்பற்ற கட்டிடத்தில் இயங்கி வரும் காதுகேளாத குழந்தைகளின் பள்ளி

07.10.2016, 
கடலூரில் தானே புயலுக்கு பிறகு கடும் சேதம் அடைந்த அரசு காதுகேளாதோர் பள்ளி, போதிய பராமரிப்பு இல்லாமல் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.

கடலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதுகேளாதோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டிடத்துக்கு இந்த பள்ளி மாற்றப்பட்டது. தற்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட செவித்திறன் இல்லாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியுடன் விடுதியும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தானே புயலின் போது ஏற்பட்ட சேதத்தால் தற்போது இடிந்து விழும் நிலையில், பள்ளி கட்டிடம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை மரியபாஸ்கா.

இதேபோல் பள்ளி கட்டிடம் சிமெண்ட் கூரையால் அமைக்கப்பட்டுள்ளதால், கடும் வெப்பம் நிலவுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மாணவர்கள். பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும், வாடகை வாங்குவதில் மட்டுமே மாவட்ட நிர்வாகம் அக்கறை செலுத்துவதாகவும், மாணவர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment