FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 12, 2016

இலவச ஐ.டி.ஐ., பயிற்சி காதுகேளாதோர் வலியுறுத்தல்

12.10.2016, சிவகங்கை : படித்த காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஐ.டி.ஐ., பயிற்சி வழங்க வேண்டுமென, சிவகங்கை மாவட்ட காதுகேளாதோர் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.அச்சங்க தலைவர் கண்ணன், நிர்வாகிகள் பழனியப்பன், காதர்சுல்தான், ஜெயக்குமார், தனராஜ் ஆகியோர் கலெக்டர் மலர்விழியிடம் அளித்த மனுவில் கூறியதாவது: படித்த காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஐ.டி.ஐ., பயிற்சி தர வேண்டும். காது கேளாதோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு தர வேண்டும். விலைவாசி உயர்விற்கு ஏற்ப, மாத உதவித்தொகையை 3 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக் பணி வழங்க வேண்ணடும். டிரைவிங் லைசன்ஸ் தர வேண்டும். சொந்த இடம் உள்ளோருக்கு வீடு கட்டிதர வேண்டும். மாவட்ட காதுகேளாதோர் நல சங்கத்திற்கு கட்டடிடம் கட்டிதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment