FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, October 19, 2016

தேநீர் விடுதியில் வேலை பார்க்கும் DEAF விளையாட்டு வீராங்கனைகள்!

ஜாம்ஷெட்பூர் நகர், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரில் அண் மையில் துவங்கப்பட்ட லா கிராவிடீ தேநீர் விடுதி இன்று அகில இந்திய அளவில் பிர பலம் அடைந்துள்ளது.

உலக நாடுகளின் தேநீர் மய்யமாகச் செயல்படும் இந்த தேநீர் விடுதி, 105 ரக தேநீரை ஆர்டரின் பேரில் தயாரித்து தேநீர் பிரியர்களுக்கு வழங்கிவருகிறது.

இதற்காக உலகின் பல பகுதியிலிருந்து தேயிலை மற்றும் மூலிகை, வாசனை செடி, வாசனை இலைகள், வாசனைப் பூக்கள் இவற்றை தருவிக்கிறார்கள். நூற்றி அய்ந்து வகை தேநீர் தயாரிப்பதினால் மட்டும் இந்த விடுதி அகில இந்திய பிரபலம் அடைய வில்லை.

இந்த விடுதியில் தேநீர், சிற்றுண்டி, உணவு வகைகள் தயாரித்து பரிமாறும் ஏழு பெண்கள் பேசும், கேட்கும் திறன் இல்லாதவர்கள். விளையாட்டு வீராங்கனைகள். சர்வதேச, தேசிய விருதுகள் பல பெற்றவர்கள்.

தகுதி, திறமை, கிடைத்த விருதுகள் எதுவும் அங்கீ கரிக்கப் படாததினால்.... வேலை எதுவும் கிடைக்காததினால், எதிர்காலம் இருண்டு கேள்விக்கு குறியாகி மிரட்டியதால் மிரண்டு போனவர்கள். அவர்களின் குறைந்த பட்ச வாழ்வாதாரத்திற்காகத் தொடங்கப் பட்டது தான் லா கிராவிடீ.

காது கேட்காத ஊமைகளான இந்த ஏழு பேர்களும் லா கிராவிடீ யை நிர்வகித்து வரும் நேர்த்தி அலாதியானது. விடுதிக்கு வருபவர் களை வரவேற்பது, என்ன வேண்டும் என்று கேட்டு சிற்றுண்டி தயாரித்து வாடிக்கையாளர் விரும்பும் தேநீர் என்ன என்பதை அறிந்து அதைத் தயாரித்து வழங்குவதை ஒரு கலை யாகவே செய்து வருகின்றனர். மவுன உலகில் வாழும் இவர்களின் மொழி சைகை தான்..

லா கிராவிடீ யில் பணிபுரியும் குர்விர் கவுர், கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் இறகுப் பந்தாட் டத்தில் தங்கப் பதக்கம் வென்றவர்.

குர்விர் கவுரின் சைகை மொழி, வாடிக்கை யாளர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்குப் புரிவதில் சிரமம் ஏதும் இருந்தால் உதவிக்கு வந்து மொழி பெயர்ப்பவர் லா கிராவிடீ யின் உரிமையாளர் அவினாஷ் துக்கர்.

“ஒரு முறை நான் தற்செயலாக அவினாஷ் துக்கரைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் விருது கிடைத்ததற்குப் பிறகு என்னென்ன மாற் றங்கள் ஏற்பட்டன’’ என்று விசாரித்தார். “விருது கிடைத்தது அவ்வளவுதான்.. அர சாங்க உதவிகள் எதுவும்கிடைக்கவில்லை’’.. என்று சொன்னேன். ஜார்கண்டைச் சேர்ந்த இதர விளையாட்டு வீராங்கனைகளை ஒன்று சேர்த்தார்.

மீதம் ஆறுபேருமே என்னைப் போன்றே பேச முடியாதவர்கள். காதும் கேட்காது. எங்கள் ஏழு பேரைக் கொண்டு இந்தத் தேநீர் விடுதியை உருவாக்கினார். உணவு வகைகள், பல சுவைகளில் தேநீர் தயாரிப்பதைச் சொல்லிக் கொடுத்தார்கள்’’ என்கிறார் குர்விர் கவுர்.

லா கிராவிடீ உரிமையாளர் அவினாஷ், “இப்படி ஏழு திறமையானவர்கள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தொடக்கத்தில் இவர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் தர வேண்டி வந்தது. பயிற்சிக்குப் பிறகு உணவு தயாரிப்பதில், வாடிக்கையா ளர்களை வரவேற்பதில், ஆர்டர் பெறுவதில், பரிமாறுவதில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டார்கள்.

வாடிக்கையாளர்களுக்கும் திருப்தி. விரை வில், லா கிராவிடீ கிளைகளை ஆரம்பிக்கப் போகிறேன். இந்த வீராங்கனைகள் மாதிரி இன்னும் நூறு பேருக்கு வேலை வாய்ப்பு தரும் திட்டம் உருவாக இந்த ஏழு பெண்களின் உழைப்பு எனக்குத் தந்திருக்கும் நம்பிக் கைதான் காரணம்‘’ என்கிறார் அவினாஷ்.

No comments:

Post a Comment