FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, October 8, 2016

தீக்காயமடைந்த காதுகேளாத மற்றும் வாய்பேசாத சிறுவன் 'முரண்டு': உண்மை தெரியாமல் போலீஸ் தவிப்பு

08.10.2016, கொண்டலாம்பட்டி:    தீக்காயமடைந்த சிறுவன், சரிவர பதிலளிக்காமல், முரண்டு பிடிப்பதால், உண்மையை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, ராஜா என்பவரின் மகன் அபிஷேக், 16. பிறவியிலேயே, வாய்பேச இயலாத சிறுவன், அஞ்செட்டியில் உள்ள, பிரத்யேக பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அவன், கொண்டலாம்பட்டி, பாட்டப்பன் நகரில் உள்ள சித்தப்பா முத்துவின் வீட்டுக்கு, சில நாட்களுக்கு முன் வந்தான். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணியளவில், இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சேலம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனிடம், காதுகேளாத மற்றும் வாய்பேசாத சிறப்பாசிரியர்கள் சகாயராஜ், ஜெபஸ்டின் ராஜா, சிறப்பு நல மருத்துவர் பிரமிளா ராஜ்குமார் ஆகியோர், தனித்தனியே, அடுத்தடுத்து விசாரித்தனர். அவர்களிடம், மாறி, மாறி முரண்பாடான தகவலை சிறுவன் தெரிவித்தான். இதனால், தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்ற உண்மையை கண்டறிய முடியவில்லை. இதற்கு மன அழுத்தம் அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்ற ரீதியில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன செய்வதென தெரியாமல், போலீசார் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment