FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, October 8, 2016

தீக்காயமடைந்த காதுகேளாத மற்றும் வாய்பேசாத சிறுவன் 'முரண்டு': உண்மை தெரியாமல் போலீஸ் தவிப்பு

08.10.2016, கொண்டலாம்பட்டி:    தீக்காயமடைந்த சிறுவன், சரிவர பதிலளிக்காமல், முரண்டு பிடிப்பதால், உண்மையை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, ராஜா என்பவரின் மகன் அபிஷேக், 16. பிறவியிலேயே, வாய்பேச இயலாத சிறுவன், அஞ்செட்டியில் உள்ள, பிரத்யேக பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அவன், கொண்டலாம்பட்டி, பாட்டப்பன் நகரில் உள்ள சித்தப்பா முத்துவின் வீட்டுக்கு, சில நாட்களுக்கு முன் வந்தான். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணியளவில், இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சேலம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனிடம், காதுகேளாத மற்றும் வாய்பேசாத சிறப்பாசிரியர்கள் சகாயராஜ், ஜெபஸ்டின் ராஜா, சிறப்பு நல மருத்துவர் பிரமிளா ராஜ்குமார் ஆகியோர், தனித்தனியே, அடுத்தடுத்து விசாரித்தனர். அவர்களிடம், மாறி, மாறி முரண்பாடான தகவலை சிறுவன் தெரிவித்தான். இதனால், தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்ற உண்மையை கண்டறிய முடியவில்லை. இதற்கு மன அழுத்தம் அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்ற ரீதியில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன செய்வதென தெரியாமல், போலீசார் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment