FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, October 8, 2016

தீக்காயமடைந்த காதுகேளாத மற்றும் வாய்பேசாத சிறுவன் 'முரண்டு': உண்மை தெரியாமல் போலீஸ் தவிப்பு

08.10.2016, கொண்டலாம்பட்டி:    தீக்காயமடைந்த சிறுவன், சரிவர பதிலளிக்காமல், முரண்டு பிடிப்பதால், உண்மையை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, ராஜா என்பவரின் மகன் அபிஷேக், 16. பிறவியிலேயே, வாய்பேச இயலாத சிறுவன், அஞ்செட்டியில் உள்ள, பிரத்யேக பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அவன், கொண்டலாம்பட்டி, பாட்டப்பன் நகரில் உள்ள சித்தப்பா முத்துவின் வீட்டுக்கு, சில நாட்களுக்கு முன் வந்தான். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணியளவில், இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சேலம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனிடம், காதுகேளாத மற்றும் வாய்பேசாத சிறப்பாசிரியர்கள் சகாயராஜ், ஜெபஸ்டின் ராஜா, சிறப்பு நல மருத்துவர் பிரமிளா ராஜ்குமார் ஆகியோர், தனித்தனியே, அடுத்தடுத்து விசாரித்தனர். அவர்களிடம், மாறி, மாறி முரண்பாடான தகவலை சிறுவன் தெரிவித்தான். இதனால், தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்ற உண்மையை கண்டறிய முடியவில்லை. இதற்கு மன அழுத்தம் அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்ற ரீதியில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன செய்வதென தெரியாமல், போலீசார் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment