FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, October 24, 2016

மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் பெறுவதில் சிக்கல்

24.10.2016
கைவிரல்கள், கண்களை இழந்த மாற்றுத் திறனாளிகள் தனித்துவ ஆதார் எண் பெறுவதில் பெறும் சிரமங்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், மாற்றுத் திறனாளிகளும் அடையாள அட்டை பெற உரிய வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனித்துவ ஆதார் எண் வழங்கும் பணிகள் தற்போது மாநில அரசின் கேபிள் தொலைக்காட்சி நிறுவனமான இணைய சேவை மையங்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆணையத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தனித்துவ ஆதார் எண், உயிரி பதிவேடு (பயோ-மெட்ரிக்) முறை மூலம் அளிக்கப்படுகிறது. அதாவது, விண்ணப்பதாரரின் இரு கைகளில் உள்ள பத்து விரல் ரேகைகள், கண்களின் கருவிழிப் படலம் ஆகியன பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார் எண் வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் இதுவரை 95 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு ஆதார் எண்ணுக்காக அவர்களது கை விரல் ரேகைகள், கருவிழிப் படலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சிக்கலில் மாற்றுத் திறனாளிகள்: விபத்திலோ, பிறப்பிலோ கண்களையும், கை விரல்களையும் இழந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஆதார் எண் வழங்க உயிரி பதிவேடு எடுக்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் தனித்துவ ஆதார் எண்ணைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகார்கள் கூறப்படுகின்றன.

தோல் நோயால் பாதிக்கப்பட்டு கை விரல்கள் மடங்கிய நிலையில் இருப்பவர், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த எஸ். பத்மாவதி. அவர் ஆதார் எண்ணைப் பெற கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறார். ஆனால், கை விரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியாததால், ஆதார் எண் வழங்க இயலாது என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் எண் கிடைக்காததால், எரிவாயு உருளை மானியம் பெற முடியவில்லை என்றும், புதிய குடும்ப அட்டைக்காக ஆதார் எண்ணை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பத்மாவதி தெரிவித்தார்.
இதேபோன்று, கை விரல்கள், கருவிழிப் படலம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதார் எண் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உரிமையை மறுக்க முடியாது: இந்தப் புகார்கள் குறித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டு ஆணைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த விளக்கம்:
ஆதார் எண்ணுக்காக உயிரி பதிவேடு எடுக்கும் போது, ஒரு கையில் விரல் இல்லாவிட்டால் மற்றொரு கையில் உள்ள விரல்களின் ரேகைகளைப் பதிவு செய்து கொள்ளலாம். விரல்கள் இல்லாத கைகளின் புகைப்படத்தை எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
இதே நிலையே கண்ணுக்கும் பொருந்தும். இதேபோன்று, இரண்டு கைகளில் விரல்களும், கண் பார்வையும் இல்லாத மாற்றுத் திறனாளிகள் அதற்கான உரிய புகைப்படத்தை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்கலாம்.
இந்தப் புகைப்படங்களை ஆதார் எண்ணுக்காக விண்ணப்பிக்கும் மையத்திலேயே எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். இந்தப் பணியை, ஆதார் எண்ணுக்காக உயிரி பதிவு செய்யும் அலுவலர்களே மேற்கொள்ள வேண்டும்.
கை விரல் ரேகைகளோ, கண்ணின் கருவிழிப் படலத்தையோ பதிவு செய்து அனுப்ப முடியவில்லை என்பதற்காக, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் எண் வழங்கும் உரிமையை மறுக்க முடியாது என்றனர் அவர்கள்.

No comments:

Post a Comment