FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, October 24, 2016

மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் பெறுவதில் சிக்கல்

24.10.2016
கைவிரல்கள், கண்களை இழந்த மாற்றுத் திறனாளிகள் தனித்துவ ஆதார் எண் பெறுவதில் பெறும் சிரமங்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், மாற்றுத் திறனாளிகளும் அடையாள அட்டை பெற உரிய வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனித்துவ ஆதார் எண் வழங்கும் பணிகள் தற்போது மாநில அரசின் கேபிள் தொலைக்காட்சி நிறுவனமான இணைய சேவை மையங்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆணையத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தனித்துவ ஆதார் எண், உயிரி பதிவேடு (பயோ-மெட்ரிக்) முறை மூலம் அளிக்கப்படுகிறது. அதாவது, விண்ணப்பதாரரின் இரு கைகளில் உள்ள பத்து விரல் ரேகைகள், கண்களின் கருவிழிப் படலம் ஆகியன பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார் எண் வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் இதுவரை 95 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு ஆதார் எண்ணுக்காக அவர்களது கை விரல் ரேகைகள், கருவிழிப் படலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சிக்கலில் மாற்றுத் திறனாளிகள்: விபத்திலோ, பிறப்பிலோ கண்களையும், கை விரல்களையும் இழந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஆதார் எண் வழங்க உயிரி பதிவேடு எடுக்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் தனித்துவ ஆதார் எண்ணைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகார்கள் கூறப்படுகின்றன.

தோல் நோயால் பாதிக்கப்பட்டு கை விரல்கள் மடங்கிய நிலையில் இருப்பவர், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த எஸ். பத்மாவதி. அவர் ஆதார் எண்ணைப் பெற கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறார். ஆனால், கை விரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியாததால், ஆதார் எண் வழங்க இயலாது என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் எண் கிடைக்காததால், எரிவாயு உருளை மானியம் பெற முடியவில்லை என்றும், புதிய குடும்ப அட்டைக்காக ஆதார் எண்ணை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பத்மாவதி தெரிவித்தார்.
இதேபோன்று, கை விரல்கள், கருவிழிப் படலம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதார் எண் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உரிமையை மறுக்க முடியாது: இந்தப் புகார்கள் குறித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டு ஆணைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த விளக்கம்:
ஆதார் எண்ணுக்காக உயிரி பதிவேடு எடுக்கும் போது, ஒரு கையில் விரல் இல்லாவிட்டால் மற்றொரு கையில் உள்ள விரல்களின் ரேகைகளைப் பதிவு செய்து கொள்ளலாம். விரல்கள் இல்லாத கைகளின் புகைப்படத்தை எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
இதே நிலையே கண்ணுக்கும் பொருந்தும். இதேபோன்று, இரண்டு கைகளில் விரல்களும், கண் பார்வையும் இல்லாத மாற்றுத் திறனாளிகள் அதற்கான உரிய புகைப்படத்தை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்கலாம்.
இந்தப் புகைப்படங்களை ஆதார் எண்ணுக்காக விண்ணப்பிக்கும் மையத்திலேயே எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். இந்தப் பணியை, ஆதார் எண்ணுக்காக உயிரி பதிவு செய்யும் அலுவலர்களே மேற்கொள்ள வேண்டும்.
கை விரல் ரேகைகளோ, கண்ணின் கருவிழிப் படலத்தையோ பதிவு செய்து அனுப்ப முடியவில்லை என்பதற்காக, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் எண் வழங்கும் உரிமையை மறுக்க முடியாது என்றனர் அவர்கள்.

No comments:

Post a Comment