FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, October 24, 2016

மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் பெறுவதில் சிக்கல்

24.10.2016
கைவிரல்கள், கண்களை இழந்த மாற்றுத் திறனாளிகள் தனித்துவ ஆதார் எண் பெறுவதில் பெறும் சிரமங்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், மாற்றுத் திறனாளிகளும் அடையாள அட்டை பெற உரிய வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனித்துவ ஆதார் எண் வழங்கும் பணிகள் தற்போது மாநில அரசின் கேபிள் தொலைக்காட்சி நிறுவனமான இணைய சேவை மையங்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆணையத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தனித்துவ ஆதார் எண், உயிரி பதிவேடு (பயோ-மெட்ரிக்) முறை மூலம் அளிக்கப்படுகிறது. அதாவது, விண்ணப்பதாரரின் இரு கைகளில் உள்ள பத்து விரல் ரேகைகள், கண்களின் கருவிழிப் படலம் ஆகியன பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார் எண் வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் இதுவரை 95 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு ஆதார் எண்ணுக்காக அவர்களது கை விரல் ரேகைகள், கருவிழிப் படலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சிக்கலில் மாற்றுத் திறனாளிகள்: விபத்திலோ, பிறப்பிலோ கண்களையும், கை விரல்களையும் இழந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஆதார் எண் வழங்க உயிரி பதிவேடு எடுக்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் தனித்துவ ஆதார் எண்ணைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகார்கள் கூறப்படுகின்றன.

தோல் நோயால் பாதிக்கப்பட்டு கை விரல்கள் மடங்கிய நிலையில் இருப்பவர், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த எஸ். பத்மாவதி. அவர் ஆதார் எண்ணைப் பெற கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறார். ஆனால், கை விரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியாததால், ஆதார் எண் வழங்க இயலாது என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் எண் கிடைக்காததால், எரிவாயு உருளை மானியம் பெற முடியவில்லை என்றும், புதிய குடும்ப அட்டைக்காக ஆதார் எண்ணை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பத்மாவதி தெரிவித்தார்.
இதேபோன்று, கை விரல்கள், கருவிழிப் படலம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதார் எண் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உரிமையை மறுக்க முடியாது: இந்தப் புகார்கள் குறித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டு ஆணைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த விளக்கம்:
ஆதார் எண்ணுக்காக உயிரி பதிவேடு எடுக்கும் போது, ஒரு கையில் விரல் இல்லாவிட்டால் மற்றொரு கையில் உள்ள விரல்களின் ரேகைகளைப் பதிவு செய்து கொள்ளலாம். விரல்கள் இல்லாத கைகளின் புகைப்படத்தை எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
இதே நிலையே கண்ணுக்கும் பொருந்தும். இதேபோன்று, இரண்டு கைகளில் விரல்களும், கண் பார்வையும் இல்லாத மாற்றுத் திறனாளிகள் அதற்கான உரிய புகைப்படத்தை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்கலாம்.
இந்தப் புகைப்படங்களை ஆதார் எண்ணுக்காக விண்ணப்பிக்கும் மையத்திலேயே எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். இந்தப் பணியை, ஆதார் எண்ணுக்காக உயிரி பதிவு செய்யும் அலுவலர்களே மேற்கொள்ள வேண்டும்.
கை விரல் ரேகைகளோ, கண்ணின் கருவிழிப் படலத்தையோ பதிவு செய்து அனுப்ப முடியவில்லை என்பதற்காக, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் எண் வழங்கும் உரிமையை மறுக்க முடியாது என்றனர் அவர்கள்.

No comments:

Post a Comment